strike லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
strike லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜூலை 09, 2025

வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் சிவகங்கை Ho முன்பு

வேலை நிறுத்த விளக்க வாயிற்கூட்டம் சிவகங்கை Ho முன்பு தோழர்.மதிவாணன் - P3, தோழர். அம்பிகாபதி GDS ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

மூன்று சங்கத்தை சார்ந்த செயலர்கள் மற்றும் பகுதி வாரியாக கலந்து கொண்ட தோழர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தின் அவசியத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

இறுதியாக தோழர். நாகலிங்கம் P3 அவர்கள் கோரிக்கை பற்றி எழிச்சியாக கோஷமிட்டு, நன்றியுரையாற்றினார்கள்..

மார்ச் 28, 2022

வேலை நிறுத்த ஆர்பாட்டம் 28.03.2022

 சிவகங்கை Ho முன்பாக இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், பஸ் போக்குவரத்து மிக குறைவாக இருந்தாலும்கூட, அதையும் தாண்டி, பல தோழர்கள் & தோழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது, மகிழ்ச்சியாக இருந்தது.


மேலும், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன கூட்டமைப்பின், மாவட்ட ஓய்வுபெற்ற பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு, பேருரை ஆற்றிய விதம் சிவகங்கையையே அதிர வைத்தது.


கூட்டத்தினில் துவக்கமாக, தோழர். G.நாகலிங்கம் கோட்ட உதவி செயலர்-P3 அவர்கள் எழிச்சி பொங்க , கோரிக்கைகளுடன் கூடிய கோஷம் எழுப்பிய விதம் மிக அருமையாக அமைந்தது.


கூட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்தியதோழர். K. மதிவாணன் செயலர் P3 அவர்களின் பங்கு மிக பிரமாதமாக அமைந்தது.


போராட்டத்தின் நோக்கத்தினை தெளிவாக, தோழர். P. நடராஜன் P4 செயலர்/S.செல்வன் செயலர் GDS ஆகியோர் விளக்கி பேசினர்.


போராட்டத்தில் கலந்துகொண்ட NFPE - P3/P4 மற்றும் Al GDSU தோழர்கள் & தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வீரம் செறிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


மானாமதுரை Ho/மானாமதுரை துணை அலுவலகம் மற்றும் மானாமதுரை சப்-டிவிசனைசார்ந்த துணை அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் அனைத்துமே 100% மூடுவிழா கண்டுள்ளது என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றோம்.


அதேபோல சிவகங்கை Ho மற்றும் துணை அலுவலகங்கள் முழுதும் அடைப்பு விழாகண்டதோடு, சிவகங்கை சப்-டிவிசனுக்கு உட்பட்ட அனைத்து துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள் முழுதுமே 100% மூடுவிழாகண்டிருக்கின்றது என்பதும் பெருமைபட சொல்லவேண்டும்.


சிவகங்கை கோட்டத்திற்கு ,இப்போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் எனலாம். பாரம்பரிய வழியினில் வழங்கம் போல 100% வெற்றி கண்டுள்ளது சிவகங்கை கோட்ட தொழிற்சங்கங்கள்.

பண்பாடும் , கலாச்சாரமும் மற்றும் பாரம்பரியமுமிக்க சிவகங்கை கோட்டத்தின் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் 100% ஒற்றுமையாக கடைபிடிக்கப்பட்டது.

2 தலைமை அஞ்சலகம்,

40 துணை அஞ்சலகம்,

155 கிளை அஞ்சலகம் என அனைத்து அலுவலகமும் மூடப்பட்டது..

முதல் நாள் போராட்டம் வெற்றிகராமாக முடிந்தது.


தமிழ் மாநில அளவில்  அதிகார வர்க்கத்திற்கு எதிராக சற்றும் சளைக்காத அளவில் ஒற்றுமையுடன் போராடும் குணம் உள்ள முதன்மையான கோட்டம் எதுவென்று கேட்டால் அது சிவகங்கை தான் என்ற பெருமையை பறைசாற்றும் கோட்டம் நமது கோட்டம்..,


நம் தொழிற்சங்க முன்னோடிகள் விதைத்து சென்ற ஒற்றுமையுடன் கூடிய வலிமை நமக்கு வழிகாட்டியாக போராட தூண்டுகிறது..💪


போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்கள் & தோழியர்களுக்கும் வீரவணக்கத்துடன் போராட்ட வாழ்த்துகள்













மார்ச் 26, 2022

வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டம்-kallal 26.03.2022

 வேலைநிறுத்த ஆயத்த விளக்க கூட்டம்:


இடம்: கல்லல் அஞ்சலகம்.

26.03.22

சனிக்கிழமை

நேரம்' மாலை 5 மணி

கூட்டத்தினில் கலந்துகொள்ளும் துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள்:


செம்பனூர் So மற்றும் கிளை அலுவலகங்கள்.


கல்லல் So மற்றும் கிளை அலுவலகங்கள்


பாகனேரி So மற்றும் கிளை அலுவலகம்.


நடராஜபுரம் So மற்றும் கிளை அலுவலகம்


வெற்றியூர் So மற்றும் கிளை அலுவலகம்


காளையார்கோவில் So மற்றும் கிளை அலுவலகம்.


நாட்டரசன்கோட்டை So மற்றும் கிளை அலுவலகம்


மற்றும் அருகில் உள்ள So/Boதோழர்களும் கலந்துகொள்ளலாம் என்பதனையும் தெரியப்பபடுத்திக்கொள்கின்றோம்.

____________________________________________________________________________

26.03.2022 மாலை 5 மணி 

கல்லல் SO வில் தொழிற்சங்க ஆயத்த விளக்க கூட்டம் முச்சங்கங்களின் நிர்வாகிகள் தலைமையில்  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சிறப்பு விருந்தினராக முன்னாள் கோட்டச்செயலாளர் தோழர் மலைராஜ் அவர்களும்,


அஞ்சல் மூன்று செயலளாளர் தோழர் மதிவாணன்

அஞ்சல் மூன்று து.செயலாளர்

தோழர் நாகலிங்கம்

நான்கு செயலாளர் தோழர் நடராஜன் 

Aigdsu கோட்ட செயலாளர் & மாநில உதவித்தலைவர் தோழர் செல்வன் ஆகியோர் பங்கேற்று ஆயத்த விளக்கவுரை ஆற்றினர்





மார்ச் 25, 2022

வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் -மானமதுரை 25.03.2022

 மாபெரும் வேலை நிறுத்த போராட்டம் விளக்க கூட்டம்

மானாமதுரை HO போஸ்ட் மாஸ்டர் தோழியர் தர்மாம்பாள் அவர்கள் தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது..

சிறப்பு விருந்தினராக 

முன்னாள் P3 கோட்ட செயலளார் தோழர் சேர்முக பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டார்..

P3 செயலர் தோழர் மதிவாணன்

P4 செயலாளர் தோழர் நடராஜன்

AIGDSU மாநில உதவி தலைவர் & கோட்டச் செயலர் 

தோழர் செல்வன் மற்றும்

P3 உதவி தலைவர் தோழர் சசிகுமார் விளக்கவுரை ஆற்றினர்..


வேலை நிறுத்த போராட்டம் நூறு சதவீத வெற்றி பெற அனைவரும் போராட்டத்தில் உத்வேகத்துடன் கலந்து கொள்ள தோழர்கள் & தோழியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது 







மார்ச் 23, 2022

வேலைநிறுத்த விளக்கபகுதி கூட்டம்-Tiruppattur 23.03.2022

 வேலைநிறுத்த விளக்கபகுதி கூட்டம். :


இடம்: திருப்பத்தூர் So


நாள் :23.03.22

புதன்கிழமை


நேரம் : மாலை 4 மணி


கூட்டுதலை மை :

தோழர்.ராமர்.

போஸ்ட்மாஸ்டர்/தலைவர் NFPE -P3

தோழர்.முருகானந்தம்

போஸ்ட்மாஸ்டர். P3


கலந்துகொள்ளகூடிய அலுவலகம் மற்றும் Bos:


திருப்பத்தூர் So மற்றும் அதற்குட்பட்ட கிளை அலுவலக ஊழியர்கள்.

திருப்பத்தூர் பஸ் ஸ்டாண்டு So மற்றும் GDS ஊழியர்கள்

SM.Hospital. So மற்றும் GDS ஊழியர்

கண்டவராயன்பட்டி So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்

கண்டரமாணிக்கம் So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்.

திருக்கோஷ்ட்டியூர். So மற்றும் கிளை அலுவலக ஊழியர்கள்.

ஏரியூர் So மற்றும் அதனை சார்ந்த கிளை அலுவலக ஊழியர்கள்

எனவே வேலைநிறுத்த விளக்க பகுதிக்கூட்டத்திற்கு மேற்கண்ட பகுதியை சேர்ந்ததோழர்கள் & தோழியர்கள் (NFPE - P3/NFPE - P4& Al GDSU தோழர்கள் உட்பட) திருப்பத்தூர் Soவிற்கு

மாலை 4 மணிக்குதவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.