Demonstrations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Demonstrations லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவம்பர் 06, 2020

ஆர்ப்பாட்டம் 06.11.2020

                   
 

26.11.20 அன்று நடைபெறும் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தின்  முன்னோட்டமாக சிவகங்கை தலைமை அஞ்சலகம் முன்பாக கோரிக்கைகளை விளக்கி ஆர்ப்பாட்டம் மூன்று சங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது. 


மே 22, 2020

நாடுதழுவிய எதிர்ப்பு நாள்! 22.05.2020 (Black Badge Day)


                             மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் எடுத்த முடிவின்படி,  நமது மாநில சங்கங்களின் வழிகாட்டுதலின் படி ஆளுகின்ற  மத்திய அரசின்  பெருமுதலாளிகளுக்கு ஆதரவான போக்கை கண்டித்தும்,  தனியார் மயத்திற்கு ஆதரவான தொழிலாளர், தொழிற்சங்கங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ண்டித்தும்.  நாடு முழுதும் அனைத்து மத்திய அரசு, பொதுத்துறை ஊழியர்கள் கருப்பு badge அணிந்து இன்று (22.05.2020) கண்டன போராட்டம் நடத்தினர். 

                  இதில் நம் அஞ்சல் ஊழியர்கள் தீவிரமாக கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  நமது சிவகங்கை கோட்டத்தில் அனைத்து அலுவலகங்களிலும்  அஞ்சல் மூன்று, நான்கு மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர். 

போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர் தோழியர்களுக்கும் போராட்ட வாழ்த்துக்கள்!