மே 20, 2023

கண்டன ஆர்ப்பாட்டம்!

இன்று 20.5-23 மாலை 5.30 மணியளவில், பேரியக்கங்களின் அங்கீகார ரத்தை திரும்ப பெற கோரியும், நாடெங்கும் தலைவிரித்தாடும் புதிய அக்கவுண்டு கணக்கு துவங்க சொல்லி தொடர்ந்து,டார்கெட் கொடுத்து டார்ச்சர் பண்ணி வரும் அதிகாரிகளை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தை Al GDSUன் கோட்ட தலைவர் தோழர்.அம்பிகாபதி அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார்.

ஆர்பாட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி மூத்த தோழர். S.ராஜேந்திரன் அவர்களும், Ex.p4 செயலர். G.மீனாட்சிசுந்தரம் அவர்களும்,P3 தலைவர் கரிகாலச் சோழன் அவர்களும்,P3ன் நிதி செயலர் திருக்குமார் அவர்களும், கோட்ட உதவி தலைவர். தோழியர்.தர்மாம்பாள் அவர்களும், தோழர்.திருமலை அவர்களும், கோட்ட செயலர், தோழர். K. மதிவாணன் P3 அவர்களும், கோட்ட செயலர் தோழர்.P.நடராஜன் P4 அவர்களும் எழிச்சியுரை ஆற்றினார்கள்.

இறுதியாக விண்ணதிரும் வகையில் மாநில சங்க சுப்ரீம் கவுன்சிலர் தோழர். G.நாகலிங்கம் உதவி செயலர் அவர்கள் ஆர்ப்பாட்ட கோரிக்கையினை, உரத்த குரலில் கோஷமிட்ட முழங்கினார்.

அனைத்து பகுதியிலிருந்தும் தோழர் & தோழியர்கள் கலந்துகொண்டது வெற்றி நிகழ்வாக அமைந்தது.

தோழமைகளுக்கு நன்றி! நன்றி!

செல்வன். S
செயலர் Al GDS U
சிவகங்கை DN

மே 17, 2023

பணி நிறைவு விழா!

பணி நிறைவு:

மானாமதுரை சப் - டிவிசன் சாலைக்கிராமம் So வண்டல் Boவில் கடந்த 38 வருடங்களாக GDS BPM ஆக பணியாற்றி வந்த Al GDSU பேரியக்க சங்கத்தின் மூத்த தோழர். M.ஹைதர் அலி அவர்கள் 13.5.23 அன்று பணி ஓய்வு பெற்றார். அதற்க்கானவிழா  சனிக்கிழமை 17.05.23 அன்று சாலைகிராமம் SO வில் நடைபெற்றது.

தொழிற்சங்கங்கள் நடத்துகின்ற ஒவ்வொரு நிகழ்வினிலும் தவறாது கலந்துகொள்ளக்கூடிய தன்னலமற்ற தோழரவர்.

அவரின் பணி ஓய்வு வாழ்க்கை மிக சிறப்பாக, ஆனந்தமாக அமைந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

தோழமையுடன்...

K. மதிவாணன்,
செயலர்-P3

P. நடராஜன்,
செயலர் - P4

S. செல்வன்
செயலர் Al GDSU
சிவகங்கை DN
🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸🙏🌸

மே 06, 2023

அங்கீகார ரத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

 படை திரண்டு வாரீர்!

வாரீர்! தோழமைகளே!

நமக்கு பாதுகாப்பு கொடுத்து, முழு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிவருகின்ற பாரம்பரிய தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தினை முடக்கிவைத்திருக்கின்ற அஞ்சல் இலாக்கா மற்றும் மத்திய அரசினைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்திட தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றது.

அதனடிப்படையில் வரும் 09 - 05 - 2023 மாலை 6 மணியளவில் சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம். அதற்குரிய நோட்டீசும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நினைக்கின்றோம்.

தயவுசெய்து செய்திகளை படித்துவிட்டு வெறுமனே நின்றுவிடாமல் சிவகங்கை வந்துசேரவும். முக்கியமாக SPM's தோழமைகள் அனைவரும் அலுவலகப்பணியினை முடித்துவிட்டு மாலை6 மணிக்கெல்லாம் வந்துசேர சரியாக இருக்கலாம்.

அங்கீகார பறிப்பினை கண்டித்து Al GDSU சங்கங்களும் போர்க்கொடி தூக்கி தார்மீக ஆதரவு தந்துபோராடி வருகின்றது.

தமிழ் மாநில AlGDSU மற்றும் அகில இந்திய AlGDSU சங்கங்களுக்கு சிவகங்கை கோட்ட சங்கங்கள் வீரமிகு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. தொழிற்சங்கம் என்பது அனைவருக்குமே பாதுகாப்பான ஆயுதம் என நிருபனமாகியிருக்கின்றது.

தோழமையுடன்...

P. நடராஜன்,

செயலர் - P4

Sசெல்வன்,

செயலர் Al GDSU

சிவகங்கை DN






மே 05, 2023

தோழர் காரல் மார்க்ஸ் 205வது பிறந்த நாள்!

 தோழர் காரல் மார்க்ஸ்

205வது பிறந்த நாள்

 

உலகத் தொழிலாளர் விடுதலைக்காக உயரிய தத்துவம் தந்த புரட்சியாளன் மாமேதை மார்க்சின் இல்லற வாழ்வு மிகுந்த துயரமும் வறுமையும் நிறைந்தது.


தனது உற்ற தோழன் ஏங்கல்ஸிற்கு எழுதிய கடிதங்களில் வறுமையை மார்க்ஸ் விவரித்துள்ளார்.


எடுத்துக்காட்டாக சில. 


நியூயார்க் ட்ரிப்யூன் என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு போதிய

ஸ்டாம்பு வாங்க வழியில்லாமல் குழந்தைகளின் பழைய பூட்ஸ்களை அடகுவைத்து கடன் வாங்கி இருக்கிறார்.  


குடும்பச் செலவிற்கு தன் மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு பல நாட்கள் சட்டையில்லாமல் வெளியில் செல்ல வாய்ப்பின்றி வீட்டிலே அடைந்து கிடந்ததுமுண்டு.


மார்க்சின் துணைவியார் ஜென்னி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் நாட்டு மந்திரியின் சகோதரி. தானே விரும்பி கைப்பிடித்த மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்தித்த வறுமையே அதிகம்.

இருப்பினும் தன் கணவனின் இலட்சியம் நிறைவேற வசதிகளைத் தியாகம் செய்து வறுமையைப் பகிர்ந்து கொண்டார்.


மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்திக்கும் வறுமை குறித்து தன் நண்பனுக்கு ஜென்னி எழுதிய கடிதத்திலிருந்து....


கடுமையான முதுகு வலி மற்றும் மார்பகவலி இவற்றுடன் என் குழந்தைக்கு பாலூட்டுவேன். ஆனால் குடித்த பாலைவிட குழந்தை அதிகமாய் என் தூக்கத்தைப் பறித்துக் கொண்டது .சமீபமாக வலிப்பு நோய் ஏற்பட்டு உயிருடன் போராடுகிறது.


ஒருமுறை பால் குடிக்கும்போது வலிப்பு வந்துவிட பற்கள்பட்டு மார்பில் வெளியான  இரத்தத்துடன் பாலையும் சேர்த்து குழந்தை பருகியது. 


குடியிருந்த வீட்டைக் காலி செய்ய ஐந்து பவுன் கொடுக்க முடியாதபோது ஏலம் போடும் தரகர்கள்  துணி மணிகளோடு குழந்தைகள் கதறக் கதற  பொம்மைகளையும் எடுத்துக் கொண்டார்கள். 


வீட்டில் இருந்த படுக்கைகள் தட்டு முட்டுக் சாமான்கள் இவற்றைவிற்று ரொட்டிக்காரன் பால்காரன் வைத்தியன் இறைச்சிக் கடைக்காரன் இவர்களின் கடனைத் தீர்த்த பின்பே வேறு வீட்டுக்கு குடி புகுந்தோம். 


கடைசிக்குழந்தைபிரான்சிஸ்கா மார்புச்சளியால் இறந்து போனது.


பணமுடை காலத்தில் இறந்து போன குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க முடியவில்லை.

நண்பர் ஒருவர் பெரியமனதுடன் கொடுத்த  இரண்டு பவுனில் தான் சவப்பெட்டி வாங்கினேன். அந்தக் குழந்தை பிறந்த போதும் தொட்டில் வாங்க முடியாது போனது போல  இறந்த போதும் சவப்பெட்டி வாங்க கஷ்டப்பட்டுப் போனேன்.


மார்க்சின் இறுதிநாட்களில் ஏங்கல்ஸ் தான் பண  உதவி செய்தார். 


கட்டுரைகள் வெளியாவது குறைந்து பத்ரிகை வருவாய் இல்லாதபோது மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்.


" என்னை யாராவது பூமிக்குள் புதைத்து விட்டால் நான் திருப்தியடைவேன். இந்த மாதிரி வாழ்க்கையைவிட அதுவே மேல்."


வறுமை கோரப்பிடியை

இறுக்கும் போது தனது இரண்டு பெண்களை பெரிய மனிதர்கள் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்துவது, மணைவி கைக்குழந்தையுடன்  அநாதை விடுதிக்கு சென்று விடுவது என தீர்மானித்த போது ஏங்கல்ஸ் அனுப்பிய  ஐந்து பவுன் நிலைமையை மாற்றியது.


வைத்தியம் பார்த்தவனுக்கு கடன் செலுத்த முடியாமல் வழக்குத் தொடர்வேன், 

வீட்டிற்கு கரண்டு தண்ணீர் சப்ளை நிறுத்திவிடுவேன் என மிரட்டிய போது மார்க்ஸ் யாருக்கும் தெரியாமல் மான்செஸ்டர் ஓடிப்போனதும் உண்டு. 


1881ல் ஜென்னியும் 1883ல் மார்க்சும் இறந்து போகின்றனர்.


வறுமை சூழ்ந்த வாழ்வில் தான் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையும் 1867ல்

"காபிடல்" முதல் தொகுதியும் மறைவிற்கு பின் 1883 மற்றும் 1894ல் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளும் வெளியாகின.


உற்ற தோழன் ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறப்பில் மயான  உரையில் மார்க்ஸ் இறந்துவிட்டான் எனச் சொல்ல வில்லை. மார்க்ஸ் தான்

சிந்திப்பதை இன்றுடன் நிறுத்திக் கொண்டான் என்றார்.


1895ல் ஏங்கல்ஸ்  மரணமடைந்தார். 


உலகு போற்றும்   இலட்சியவாதிகள் வாழ்க்கை பெரும்பாலும் துயரைத் தான் தோழமை பூண்டதாய் இருந்துள்ளது.


-கா. செல்வராஜ்

மே 02, 2023

தோழர். A. அந்தோணி ABPM GDS MD பிளார் BO பணி நிறைவு-பாராட்டல்

 பணி நிறைவு-பாராட்டல்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


கல்லல் So பிளார் Boவில் கடந்த 42 ஆண் டுகளாக ABPM (GDS mD)யாக பணியாற்றி வரும் மூத்த Al GDSU உறுப்பினர் தோழர். A. அந்தோணி அவர்கள் 02 - 05 -23 செவ்வாய்கிழமையன்று பணி ஓய்வுபெறவுள்ளார்கள் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.

பணி ஓய்வுகாலம் முழுதும் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், குடும்ப சகிதத்தோடும், பல்லாண்டுகாலம் வாழ்ந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்,

தோழமையுடன்...

K. மதிவாணன்,

செயலர் P3

P. நடராஜன்

செயலர் P4

S.செல்வன்

செயலர் AIG D SU

சிவகங்கை DN










உணர்வடையுங்கள்...! அல்லது உடைக்கப்படுவீர்கள்...!

 

உணர்வடையுங்கள்...
அல்லது உடைக்கப்படுவீர்கள்...

அறைகூவல் என்றொரு வார்த்தையை கேள்விப்பட்டிருப்பீர்கள்...

என் வீட்டில் விசேஷம் கண்டிப்பாக வந்துவிடுங்கள் என்று ஒவ்வொருவருக்காய் தனித்தனியே தாம்பாளத்தில் பத்திரிகை வைத்து அழைப்பதல்ல அது... 

ஒரு காகம் கரைந்ததும் அடுத்த சில நிமிடங்களில் ஒரு கூட்டம் காகங்கள் ஒன்று சேர்ந்திருக்கும். நம் கூட்டத்தில் ஒரு காகத்திற்கு ஆபத்து அனைவரும் வாருங்கள் என்ற ஒற்றை அறைகூவலில் சேர்ந்ததே அந்த கூட்டம்.

தொழில்நுட்பம் இல்லாத அந்த காலங்களிலே அஞ்சல் அட்டையில் விடப்பட்ட  போராட்ட அறைகூவல் கிடைக்கப்பெற்று குறித்த நாளில் குறித்த இடத்தில் குறித்த நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தனர்  நம் தொழிற்சங்க முன்னோடிகள். 

இன்றோ தொழில்நுட்பம் கற்பனைக்கெட்டா அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. வாட்சப் நம் வாழ்வின் அங்கமாய் போனது. அரசு இயந்திரமே அதில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. 

ஒரே நொடியில் ஒரு பெரும் கூட்டத்திற்கே  தகவல்களை கடத்தும் வல்லமை பெற்றது இந்த வாட்சாப்பும் அதன் தொழில்நுட்பமும். காலமாற்றத்தில் நாமும் இந்த வாட்சாப் பெருங்கடலில் நீந்தியாகவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டோம்.

டஜன் கணக்கில் வாட்சாப் குழுக்கள் இருந்ததால்  தொழிற்சங்கத்திற்கு ஓர் பிரச்சனை... தோழர்களே போரட்டத்திற்கு வாருங்கள் என்று கோட்டச்செயலரால் விடுக்கப்பட்ட  அறைகூவல் நம் காதுகளை எட்டாமல் போயிருக்கலாம். 

குழுவில் தானே தகவல் சொன்னார்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் சொல்லவில்லையே, பின் நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று நம் ஈகோ நம்மை உணர்த்தியிருக்கலாம்.

எனக்கு எந்த பிரச்சனையும் இல்லையே, அப்புறம் நான் எதுக்கு தேவை இல்லாம நிர்வாகத்துக்கு எதிரா போராடனும் என்று நம் ஆழ்மனம் நம்மை நியாப்படுத்தியிருக்கலாம்.

நம்ம அலுவலகத்தில் இரண்டு வாசல் இருக்குறது எவ்வளவு நல்லதா போச்சு, அந்த பக்கம் போராட்டம்/ஆர்ப்பாட்டம் நடந்தா நாம இந்தப்பக்கமா போய்டலாம் என்று நமக்குள் இருந்த ஏழாம் அறிவு வேலை செய்திருந்திருக்கலாம்.

வெளிய போனா நம்மளையும் கூட்டத்துல நிக்க வச்சிருவாங்க, அவங்க போனதுக்கப்புறம் வெளிய போகலாம்.. அதுவரைக்கும் ஏதாவது வேலையை பாப்போம்..  அந்த  பெண்டிங் வேலையை பார்ப்போம் என்று நமக்குள் இருந்த கடமையுணர்சி கரைபுரண்டோடியிருக்கலாம்.

எது எப்படியோ நேற்றைய ஆர்ப்பாட்டம் முடந்து விட்டது.. அடுத்த ஆர்ப்பாட்டம் நடக்கும் போது பார்துக்கொள்ளலாம். ஆர்ப்பாட்டத்திற்கு காரணம் கிடைக்கும் போது அதை தவிர்த்து செல்ல நமக்கு காரணம் கிடைக்காதா என்ன?

பட்டயப்படிப்பு பட்டப்படிப்பு பட்டமேற்படிப்பு என்று மெத்தப்படித்த நாம்,  பாலர் பள்ளியில் படித்த "சிங்கமும் நான்கு எருதுகளும்" கதையை மீண்டுமொருமுறை படிப்பது நலமென்று நினைக்கிறேன்.

எழுத்தர் பிரிவின் 90 சதவிகித உறுப்பினர்கள் எங்கள் பக்கம்... எண்ணிக்கையை கேட்க பெருமையாய் இருந்தது‌. 
ஆனால் என்ன, ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று சொன்னால் சொச்சம் பேருக்கு இன்குலாப் சிந்தாபாத், மிச்சம் பேருக்கோ சொந்த காரியம் சிந்தாபாத். 

நான் என்பது தன்னம்பிக்கை..
நாம் (தொழிற்சங்கம்) என்பது தலைக்கவசம்.

வேலை என்ற பயணத்தில் தன்னம்பிக்கையோடே பயணிக்கையில் தடைக்கற்களால் நிர்வாகம் நம்மை தடம்புரள வைக்கும். 
நிலைகுலைந்து வீழும்போது தலைக்கவசம் நம்மை காத்து நிற்கும்...

தொழிற்சங்க உணர்வு நமக்கு வருவது எப்போது...

ராஜவிசுவாசிகளாயினும்
சிறிதேனும் தொழிற்சங்க உணர்வோடிருப்போம்

உணர்வடைவோம். அல்லது பிரித்தாளும் சூழ்ச்சிகளால் உடைக்கப்படுவோம்.


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

 NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை தலைமை அஞ்சலகம் அருகில் இன்று 01.05.2023 அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-அஞ்சல் நான்கு, மற்றும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது!


















மே 01, 2023

மேதின வாழ்ததுக்கள்-2023

   


 பொய்ப் புகார் அடிப்படையில் அற்பக் காரணங்களை சொல்லி பறிக்கப்பட்ட  மாபெரும் அமைப்பான  NFPE சம்மேளனத்தின் மற்றும்  AIPEU Group C சங்கத்தின் அங்கீகாரத்தை தொடர் போராட்டத்தின் மூலம்  திரும்பப் பெற இன்றைய மேதினத்தில் சபதமேற்போம்.


அனைத்து தோழமைகளுக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்!


சிவகங்கை கோட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் நடைபெற்ற மேதின கொடியேற்று நிகழ்வின் புகைப்படங்கள்!

சிவவகங்கை HO




மானாமதுரை HO






திருப்பத்தூர் SO



கல்லல் SO


மதகுபட்டி SO



திருப்புவனம் SO




ஏப்ரல் 29, 2023

தொழிற்சங்க அங்கீகார ரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இடம்: சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக


நேரம் : மாலை 5 மணி


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி



அன்பார்ந்ததோழர்கள்/தோழியர்களுக்கு வணக்கம்!


அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகின்ற பேரியக்க சங்கங்களின் (NFPE & AlPEU- Group - C/தேசீய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்/அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்-குரூப்-சி,) அங்கீகாரத்தினை ரத்து செய்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒன்றிய மத்திய அரசு மற்றும் அஞ்சல் இலாக்காவினை கண்டிக்கும் வகையில் நாடெங்கிலும் பலதரப்பட்டபோராட்டத்தினை நடத்திட மத்திய, மாநில சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.


NFPE பேரியக்கத்தைபழிவாங்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஊழியர் நலனே பெரிதெனக் கொண்டு பலதரப்பட்ட வீரமிகு போராட்டங்களை நடத்தி, பாதுகாப்புமிக்க சலுகைகளை வென்றெடுத்தவரலாற்று பாரம்பரிய பேரியக்கம்தான் நமது தேசீய அஞ்சல் ஊழியர் சங்கம்.


 ஆட்சிக்கேற்ற, சீசனுக்கேற்ற, கானல்நீர் போன்று தோன்றி மறைந்திடும் காகித லெட்டர்பேர்டு சங்கத்தினில் அப்பாவி தோழர்கள் ஒரு சிலர் மாய்ந்து, வீழ்ந்து போய்கிடப்பதை எண்ணும்போது பரிதாபமாக இருக்கின்றது.


எனவே வரலாற்று பேரியக்க சங்கங்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்த மோசமான உத்தரவினை வாபஸ் வாங்கிட நாளை 01/05/23 மே தொழிலாளர் தின நாளன்று நமது NFPE சம்மேளன செங்கொடி ஏற்றி உரக்க கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திட திரண்டு வாரீர்! வாரீர்! தோழர்களே சிவகங்கை தபால் அலுவலகம் முன்பாக.


வழங்கம் போல நமது கோட்ட தோழமை சங்கங்களின் ஆதரவுடன் (Al GDSU மற்றும் NFPE - P4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதனை தெரியப்படுத்தி, அனைத்து தோழமை சொந்தங்களும் பெருவாரியாக கலந்துகொண்டுபோராட்டத்தினை வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


ஏப்ரல் 02, 2023

அகால மரணமடைந்த தோழர் M.பாண்டி பிரசாத் GDSPKR (ABPM) , திருப்பா சேத்தி - குடும்பநல நிதி வேண்டுகோள்

  

அகால மரணமடைந்த தோழர் M.பாண்டி பிரசாத் GDSPKR (ABPM) , திருப்பா சேத்தி -  குடும்பநல நிதி வேண்டுகோள் 

  திருப்பா சேத்தி Soவில் GDSPKR (ABPM) ஆக பணி செய்துவந்த Al GDSUன் இளம் தோழர் M.பாண்டி பிரசாத்  உடல்நலக்குறைவால்  திடீரென கடந்த 07 - 03-2023 அன்று காலமாகிவிட்டார் என்பதனை அனைவரும் அறிவீர்கள் . இரத்த புற்றுநோயே மரணத்தின் காரணம் என்று அறிந்த போது நமது வேதனைக்கு அளவில்லை . இறப்புக்கு இரு வாரத்துக்கு முன்பு  கோட்டக் கண்காணிப்பாளரோடு  சிவகங்கையில் நடந்த மாதாந்திரப் பேட்டியில் நம் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்டார் . பேட்டி முடிந்த பின் சிவகங்கை தலைமை அஞ்சலகத்திற்கு வந்து போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பலரிடம் பேசிவிட்டு ஊர் திரும்பினார் . சங்கத்தின் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்  தோழர் எம். பாண்டி பிரசாத் 

 கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பாக அவருடைய தகப்பனாரும் மாரடைப்பு காரணமாக திடீரென காலமாகிவிட்டார்கள். அவருக்கு இரண்டு பெண்பிள்ளைகள், மற்றும் ஒரு பையன் (பாண்டி பிரசாத் தான்  இளையவன்). இரண்டு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்து, அவரவர்கள் கணவர் வீட்டினில் குழந்தைகளோடு வசித்து வருகின்றார்கள்.

 தோழர்.பாண்டி பிரசாத்தின் GDS சம்பளத்தை வைத்துதான் 52 வயதான அம்மாவை (அன்னகாமு) பார்த்து கவனித்துக்கொண்டுவந்தான்.அவனும் இப்போது இல்லை.

 அவர்களுக்கு என்று எந்தவித சொத்தோ, சொந்த வீடோ, நில மோ, வயற்காடோ, சொந்தபந்தங்களோ, எதுவுமே கிடையாது. எந்தவித வருமானமோ, குடியிருக்க இடமோ இன்றி வறுமையில் வாடி வாழ்ந்துவருகின்றார்  பாண்டி பிரசாத்தின் தாயார் . சொந்தபந்தம் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நம் அஞ்சல் குடும்ப ஊழியர்களை தவிர அவர்களுக்கு வேறு யாரும் கிடையாது.

 எனவே மறைந்ததோழர்.பிரசாத்தின் தாயார் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உங்களால் முடிந்த அளவிற்கு நிதி வழங்கி உதவிடுமாறு கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வேண்டி வணங்கி இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றோம்.

 நிதி அனுப்பிவைக்கும் தோழர் & தோழியர்கள் கீழ்க்கண்ட POSB அக்கவுண்டிற்கு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 J. பிரபாகரன், கோட்ட பொருளாளர், AI GDSU, சிவகங்கை DN

POSB-A/C, 1163529643

 தோழமையுடன்...

 K. மதிவாணன்செயலர் - P3

 P. நடராஜன் செயலர்-P4

 S.செல்வன்செயலர் AlGDSU

சிவகங்கை DN

 பணம் அனுப்பியவுடன், அதற்குரிய ரசீது, பெயர், பதவி, மற்றும் Bo/Soவை தெளிவாக குரூப்பினில் பதிவிடவும். இல்லையெனில் செயலர்களுக்கு ஃபோனில் தகவல் தெரிவித்துவிடவும்

மேலே உள்ள புகைப்படம் 👆🏻07.03.2023 அன்று இறந்து போன இளம் தோழர் M. பண்டிப்பிரசாத்தின் புகைப்படம். இறந்த தோழருக்கு  தாங்களால் முடிந்த நிதி உதவி வளங்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

............AIGDSU கோட்ட பொருளாளர் J. பிரபாகரன் A/C no 1163529643


GDS கேடரில் இடமாறுதல் பெற்றவர்களை வாழ்த்துகிறோம்

GDS தோழர்களுக்கு இட மாறுதல் ஆணை- as  approved by  the  CO Chennai for the GDS under Rule-3 transfer(March-2023 Schedule)

Please click the link below to see the GDS allotment order issued for March 2023

GDS Transfer under Rule3 of GDS (C&E) Rules 2021 issued by CO Chennai for March 2023 


மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ள மாறுதல் உத்தரவு அடிப்படையில் சிவகங்கை கோட்டக் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள உத்தரவு  


GDS Transfer orders issued by SPOs Sivaganga on 03.04.2023





  நமது கோட்டத்திற்க்குள் மாறுதல் பெற்ற மூத்த தோழர்கள்

  1 கே மோகன் – ABPM திருக்கோட்டியூர் ABPM

2 A மலைச்சாமி - BPM புல்வாய்க்கரை BPM

3. E சிவன் - BPM  பிரமனூர்

4. கே பாண்டியராஜன் – ABPM கண்டவராயன்பட்டி SO - ABPM

 நமது கோட்டத்திற்க்குள் மாறுதல் பெற்ற இளைய  தோழர்கள்

 1 . எஸ் ராஜேந்திரன் – ABPM முடிகண்டம் ABPM

2. எம் வான்மதி - BPM பில்லூர் BPM

3.எஸ் விக்னேஸ்வரி – BPM லாடனேந்தல் BPM

4. எம் தீபிகாஈஸவரி – BPM முத்தூர் BPM

5. கே ஆனந்தி - BPMகண்ணமங்களம் BPM

6. என் கருப்பையா – BPM புலிக்கண்மாய் BPM

 நம் கோட்டத்திலிருந்து வெளிக் கோட்டத்திற்கு செல்லும் இளைய தோழர்கள்

 1 அபிநயமீனாள் - திருச்சி கோட்டம்

2 சுகன்யா தேவி & 3 அபிராமி காரைக்குடி கோட்டம்

4 அக்‌ஷயா - மதுரை கோட்டம்

5 சரவணன் - மதுரை கோட்டம்

 வெளிக் கோட்டத்திலிருந்து  நமது கோட்டத்திற்குள்  வரும் புதிய தோழமைகள்

 1.கே தினேஷ் ( காரைக்குடி கோட்டம்  --ABPM K சுக்கானூரணி BO

2 ஜே டேனியல் ஜெனித் ( கரூர் கோட்டம்) டாக் சேவக் இடைக்காட்டூர் SO

3.எஸ் மாணிக்கவேலி( விருதுநகர் கோட்டம்) ABPM  மேலப்பசலை BO

4.4. B ஹேமநந்தினி ( திருவண்ணாமலைக் கோட்டம் ) டாக் சேவக் புதூர் (இளையான்குடி) SO


 நமது கோட்டத்திற்குள் மாறுதல் பெற்ற மூத்த மற்றும் இளைய  தோழர்களின்  அலுவலகப் பணியும் தொழிற்சங்கப் பணியும் புதிய இடங்களில் சிறக்கட்டும் என வாழ்த்துகிறோம்

 வேறு கோட்டங்களிலிருந்து சிவகங்கை அஞ்சல் கோட்டத்திற்கு மாறுதலில் வருகின்ற தோழர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

 நம் கோட்டத்திலிருந்து வெளிக் கோட்டத்திற்கு செல்லும் இளைய தோழர்கள் அனைவரும் நம்  கோட்டச் சங்கத்தின் அனைத்து போராட்டங்களுக்கும் பங்கெடுத்து வெற்றிகரமாக்கியவர்கள் .அவர்களை வாழ்த்துகிறோம் . செல்லும் கோட்டங்களிலும் உங்கள் தொழிற்சங்கப்பணி தொடரட்டும் .   

மார்ச் 27, 2023

மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்


 நாள்: 27.3.2023 

அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே!!

வணக்கம்!

      நமது NFPE அஞ்சல் மூன்று மாநில செயலாளரின் அறைகூவல்படி தெலுங்கானா மாநில P3 செயலாளரின் மீது தொடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கை  

நமது NFPE பேரியக்கத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாக கருத்தில் கொண்டு நமது சிவகங்கை கோட்டத்தில் இந்த அராஜக போக்கை கண்டித்து மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் இன்று மதியம் சரியாக 1.30 மணியளவில் நடைபெறும். அனைத்து அலுவலங்களிலும் இந்த ஆர்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி நமது ஒற்றுமையை வெளிப்படுத்துவோம். NDSO அலுவலகங்கள் அருகில் உள்ள HO /LSG அலுவலகங்களில் கலந்துகொள்ளவும். நமது தோழமை சங்கமான AIGDSEU சங்க தோழர்களையும் ஒருங்கிணைத்து. ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். சிவகங்கை கோட்ட அலுவலகம், கலெக்ட்ரேட் SO தோழர், தோழியர்கள் சிவகங்கை HO முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவும்.


தோழமை வாழ்த்துக்களுடன்,


க.மதிவாணன்

செயலாளர் அஞ்சல் மூன்று


P. நடராஜன்

செயலாளர்

அஞ்சல் நான்கு.









மாநில செயலாளரின் அறிக்கை 

 மாபெரும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 


 நாள்: 27.3.2023 


அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களுக்கு 

வணக்கம்.


 தெலுங்கானா மாநிலத்தில் P3 மாநில செயலாளர் தோழர் ஷரவண்குமார், அவர்கள் மாநில நிர்வாகத்தால்  கடந்த வாரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளை அம்மாநிலத்தில் மேற்கொண்டு வருவதன் காரணமாக , அவர் மீது நிர்வாகம் இந்த பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தகைய  தாக்குதலை நிர்வாகம்  தொடுத்துள்ளது. இது ஒரு நம் பேரியக்கத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாகும்.  எனவே இதனை முழுமையாக வெற்றிக்கொள்ள அகில இந்திய சங்கத்தின் அவசர கலந்தாலோசனை  கூட்டம் 24.3.2023 அன்று நடைபெற்றது. இதில் எடுத்த முடிவு படி வரும் திங்கட்கிழமை 27 3 2023 அன்று அகில இந்திய அளவில் அனைத்து கோட்டங்களிலும் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்திட வேண்டும் என NFPE சம்மேளனம் மற்றும் அகில இந்திய சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது. இதன் அடிப்படையில் நமது மாநிலத்திலும் அனைத்து கோட்ட / கிளைகளிலும் பாதிக்கப்பட்ட அண்டை மாநில செயலாளர் அவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டப் போராட்டத்தை நடத்திடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். போராட்டத்தின் முடிவில் தீர்மானம் ஒன்றினை துறை இயக்குனருக்கும் அனுப்பி வைத்திடவும் வேண்டும் . ஆர்ப்பாட்டப் போராட்டத்தை எந்தக் கோட்டமும் விடுதலின்றி கட்டாயம் நடத்தி அதன் புகைப்படங்களை மாநில சங்கத்திற்க்கு அனுப்பி வைத்திட கேட்டுக் கொள்கின்றோம்.


         A.வீரமணி

      அ.இ.தலைவர்/

  மாநிலச் செயலாளர்

மார்ச் 24, 2023

தோழர் பி.நடராஜன் P4 மாநில உதவிப் பொருளாளராகத் தேர்வு

 அஞ்சல் நான்கு சங்கத்தின் மாநில மாநாடு திண்டிவனத்தில் 19.03.2023 மற்றும்  20.03.2023 தேதிகளில் சிறப்பாக நடைபெற்றது . அதில் நமது கோட்டச் செயலர் தோழர் பி.நடராசன் மாநில உதவிப் பொருளாளராகத் தேர்வு  செய்யப்பட்டார்.

அவரை வாழ்த்துகிறோம்  

சிவகங்கை அஞ்சலகத்தில் அவர் கவுரவிக்கப்பட்டார் 



திண்டிவன மாநாட்டு சில புகைப்படங்கள் 











NFPE & AIGDSU சார்பில் சிவகங்கையில் மகளிர் தின விழாவும் கருத்தரங்கமும் - 19.03.2023