National Federation of Postal Employees (NFPE),Sivaganga Division,
It is the Website of the Divisional Unions of Sivaganga Postal Division affiliated to the NFPE.It comprises P3, P4 & GDS unions.
ஜூலை 25, 2024
டார்கெட் டார்ச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஜூலை 22, 2024
ஆர்ப்பாட்டம் 23.07.24
ஜூலை 20, 2024
பொதுக்குழு கூட்டம் 20.07.24
ஜூலை 19, 2024
மாலை நேர ஆர்ப்பட்டம் 19.07.24
ஜனவரி 09, 2024
தோழர் M.குழந்தை ABPM பணி ஓய்வு
நிறைவான _ பணி ஓய்வு நிகழ்வு :
சிவகங்கை கோர்ட்ஸ் Soவில் பேக்கராக பணியாற்றி வந்த தோழர் - குழந்தை அவர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி நிரலை தோழர். அம்பிகாபதி AlGD SUதலைவர் மற்றும் P3 ன் செயலர் தோழர்.மதிவாணன் அவர்களின் கூட்டுத் தலைமையிலும், P3 ன் உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தேறியது.
பணி ஓய்வு நிகழ்விற்கு பல பகுதியிலிருந்து பெருவாரியான தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, சிறப்பித்தது பெருமை கொள்ளும் படி அமைந்தது.
மேலும் நமது கோட்டத்தின் தொழிற்சங்க வழிகாட்டல் முன்னோடிகளும், பணி ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் களுமான மரியாதைக்குரிய தோழர்.செல்வராஜ் அவர்களும், தோழர் .சேர்முகப் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு தோழருக்கு பொன்னாடை போற்று மகிழ்வித்தனர்.
முச்சங்கங்களின் சார்பாக தோழருக்கு நினைவு பரிசு கெளரவித்தனர்.
கோட்ட சப்-டிவிசன் நிர்வாகம் சார்பாக பணி ஓய்வு பெற்ற தோழருக்கு சிறந்த பணி சேவையாற்றியமைக்கான நற்சான்றிதழ் - விருதும் மற்றும் கிராஜிட்டி / செவரன்ஸ் தொகைக்கான உத்திரவு ஆனையினையும் , மரியாதைக்குரிய, சிவகங்கை உபகோட்ட அதிகாரி (ip) அவர்கள் வழங்கி மரியாதை செய்து கௌரவித்தார். கோட்ட அதிகாரி மற்றும் உப-கோட்ட அதிகாரி அவர்களுக்கு கோட்ட சங்கங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.
இறுதியாக கதாநாயகனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.
ஜனவரி 06, 2024
தோழர் O.P.குப்தா நினைவு நாள்
ஒப்பிலாத் தலைவன் O P குப்தா!
எதைக் கொடுத்தும் ஒற்றுமை!
என்னையே கொடுத்தும் ஒற்றுமை என வாழ்ந்து காட்டிய தொழிற்சங்க பிதாமகன்!
நினைவு நாளில் தபால் தந்தி ஊழியர் சம்மேளனம் அமைத்து சந்தித்த போராட்டங்களையும் ஆற்றிய தொழிற்சங்க பணியையும் நினைவில் கொள்வோம்!
ஓங்குக தோழர் குப்தா புகழ்! - Com K.S
தோழர் M.நரசிங்கபெருமாள் BPM செங்குளிபட்டி பணி ஓய்வு விழா!
சிறப்பான பணி ஓய்வு - பாராட்டல் :
கடந்த 06-01-24 அன்று நடராஜபுரம் So/செங்குளிப்பட்டி Bo வில் GDSB PM ஆக பணியாற்றி வந்த மூத்ததோழர்.நரசிங்க பெருமாள் அவர்கள் பணி ஓய்வு பாராட்டல் நிகழ்வு தோழர்.நெடுஞ்செழியன் Spm மற்றும் AlGD SUன் தலைவர் தோழர்.அம்பிகாபதி ஆகியோரின் கூட்டுத் தலைமையிலும், NF PE - P3 பேரியக்க உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் வெகு சிறப்பாக அமைந்தது.
கோட்ட முச்சங்கங்களின் சார்பாக தேnழருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்ததும், அப்பகுதியினை சார்ந்த ஊழியர் அனைவரும் ஒரு சேர ஒரு கூட்டுக் குடும்பமாக இணைந்து பொன்னாடை, மாலை, மற்றும் இனிப்புகள் வழங்கி அவருக்கு பாராட்டல் மரியாதை செய்த விதம் பெருமை கொள்ள வைத்தது.
இறுதியாக அவரின் ஏற்புரை அனைவரின் மனதிலும் நெகிழ்வினை ஏற்படுத்தி, கண் கலங்க வைத்தது.
கோட்ட சப்-டிவிசனிலிருந்து உப-கோட்ட ஆய்வாளர் அவர்கள், பணி ஓய்வு பெற்றதோழரை , நேரில் வந்து வாழ்த்தி மரியாதை செய்ததோடு, அவருக்கு சேர வேண்டிய கிராஜிட்டி மற்றும் செவரன்ஸ் தொகையினை வழங்கி ஊக்குவித்ததோடு, கோட்ட நிர்வாகம் சார்பாக . அவருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கான 'நற்சான்றிதழ்' விருதினையும் கொடுத்து மென்மேலும் கௌரவித்தது மிகவும் நிறைவான மகிழ்வினை ஏற்படுத்தியது.
கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும், உப ேகாட்ட ஆய்வாளர் (ip) அவர்களுக்கும், சப்-டிவிசன் தோழர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஜனவரி 05, 2024
டிசம்பர் 28, 2023
தோழியர் P.மெடில்ட பணி ஓய்வு
ஜூலை 10, 2023
தோழர் D.ஞானையா நினைவு தினம் 8.7.2023
ஜூன் 30, 2023
தோழியர் S.லலிதா SPM திருப்புவனம் பணி ஓய்வு விழா!
ஜூன் 22, 2023
திருப்புவனம் பகுதிக்கூட்டம்-21.6.23
ஜூன் 11, 2023
கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க 13 வது கோட்ட மாநாடு.
மே 20, 2023
கண்டன ஆர்ப்பாட்டம்!
மே 17, 2023
பணி நிறைவு விழா!
மே 06, 2023
அங்கீகார ரத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
படை திரண்டு வாரீர்!
வாரீர்! தோழமைகளே!
நமக்கு பாதுகாப்பு கொடுத்து, முழு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிவருகின்ற பாரம்பரிய தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தினை முடக்கிவைத்திருக்கின்ற அஞ்சல் இலாக்கா மற்றும் மத்திய அரசினைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்திட தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றது.
அதனடிப்படையில் வரும் 09 - 05 - 2023 மாலை 6 மணியளவில் சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம். அதற்குரிய நோட்டீசும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நினைக்கின்றோம்.
தயவுசெய்து செய்திகளை படித்துவிட்டு வெறுமனே நின்றுவிடாமல் சிவகங்கை வந்துசேரவும். முக்கியமாக SPM's தோழமைகள் அனைவரும் அலுவலகப்பணியினை முடித்துவிட்டு மாலை6 மணிக்கெல்லாம் வந்துசேர சரியாக இருக்கலாம்.
அங்கீகார பறிப்பினை கண்டித்து Al GDSU சங்கங்களும் போர்க்கொடி தூக்கி தார்மீக ஆதரவு தந்துபோராடி வருகின்றது.
தமிழ் மாநில AlGDSU மற்றும் அகில இந்திய AlGDSU சங்கங்களுக்கு சிவகங்கை கோட்ட சங்கங்கள் வீரமிகு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. தொழிற்சங்கம் என்பது அனைவருக்குமே பாதுகாப்பான ஆயுதம் என நிருபனமாகியிருக்கின்றது.
தோழமையுடன்...
P. நடராஜன்,
செயலர் - P4
Sசெல்வன்,
செயலர் Al GDSU
சிவகங்கை DN
மே 05, 2023
தோழர் காரல் மார்க்ஸ் 205வது பிறந்த நாள்!
தோழர் காரல் மார்க்ஸ்
205வது பிறந்த நாள்
உலகத் தொழிலாளர் விடுதலைக்காக உயரிய தத்துவம் தந்த புரட்சியாளன் மாமேதை மார்க்சின் இல்லற வாழ்வு மிகுந்த துயரமும் வறுமையும் நிறைந்தது.
தனது உற்ற தோழன் ஏங்கல்ஸிற்கு எழுதிய கடிதங்களில் வறுமையை மார்க்ஸ் விவரித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக சில.
நியூயார்க் ட்ரிப்யூன் என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களை அனுப்புவதற்கு போதிய
ஸ்டாம்பு வாங்க வழியில்லாமல் குழந்தைகளின் பழைய பூட்ஸ்களை அடகுவைத்து கடன் வாங்கி இருக்கிறார்.
குடும்பச் செலவிற்கு தன் மேல் சட்டையை அடகு வைத்துவிட்டு பல நாட்கள் சட்டையில்லாமல் வெளியில் செல்ல வாய்ப்பின்றி வீட்டிலே அடைந்து கிடந்ததுமுண்டு.
மார்க்சின் துணைவியார் ஜென்னி வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். பெல்ஜியம் நாட்டு மந்திரியின் சகோதரி. தானே விரும்பி கைப்பிடித்த மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்தித்த வறுமையே அதிகம்.
இருப்பினும் தன் கணவனின் இலட்சியம் நிறைவேற வசதிகளைத் தியாகம் செய்து வறுமையைப் பகிர்ந்து கொண்டார்.
மார்க்சுடன் இல்லற வாழ்வில் சந்திக்கும் வறுமை குறித்து தன் நண்பனுக்கு ஜென்னி எழுதிய கடிதத்திலிருந்து....
கடுமையான முதுகு வலி மற்றும் மார்பகவலி இவற்றுடன் என் குழந்தைக்கு பாலூட்டுவேன். ஆனால் குடித்த பாலைவிட குழந்தை அதிகமாய் என் தூக்கத்தைப் பறித்துக் கொண்டது .சமீபமாக வலிப்பு நோய் ஏற்பட்டு உயிருடன் போராடுகிறது.
ஒருமுறை பால் குடிக்கும்போது வலிப்பு வந்துவிட பற்கள்பட்டு மார்பில் வெளியான இரத்தத்துடன் பாலையும் சேர்த்து குழந்தை பருகியது.
குடியிருந்த வீட்டைக் காலி செய்ய ஐந்து பவுன் கொடுக்க முடியாதபோது ஏலம் போடும் தரகர்கள் துணி மணிகளோடு குழந்தைகள் கதறக் கதற பொம்மைகளையும் எடுத்துக் கொண்டார்கள்.
வீட்டில் இருந்த படுக்கைகள் தட்டு முட்டுக் சாமான்கள் இவற்றைவிற்று ரொட்டிக்காரன் பால்காரன் வைத்தியன் இறைச்சிக் கடைக்காரன் இவர்களின் கடனைத் தீர்த்த பின்பே வேறு வீட்டுக்கு குடி புகுந்தோம்.
கடைசிக்குழந்தைபிரான்சிஸ்கா மார்புச்சளியால் இறந்து போனது.
பணமுடை காலத்தில் இறந்து போன குழந்தைக்கு சவப்பெட்டி வாங்க முடியவில்லை.
நண்பர் ஒருவர் பெரியமனதுடன் கொடுத்த இரண்டு பவுனில் தான் சவப்பெட்டி வாங்கினேன். அந்தக் குழந்தை பிறந்த போதும் தொட்டில் வாங்க முடியாது போனது போல இறந்த போதும் சவப்பெட்டி வாங்க கஷ்டப்பட்டுப் போனேன்.
மார்க்சின் இறுதிநாட்களில் ஏங்கல்ஸ் தான் பண உதவி செய்தார்.
கட்டுரைகள் வெளியாவது குறைந்து பத்ரிகை வருவாய் இல்லாதபோது மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்.
" என்னை யாராவது பூமிக்குள் புதைத்து விட்டால் நான் திருப்தியடைவேன். இந்த மாதிரி வாழ்க்கையைவிட அதுவே மேல்."
வறுமை கோரப்பிடியை
இறுக்கும் போது தனது இரண்டு பெண்களை பெரிய மனிதர்கள் வீட்டில் பணிப்பெண்களாக அமர்த்துவது, மணைவி கைக்குழந்தையுடன் அநாதை விடுதிக்கு சென்று விடுவது என தீர்மானித்த போது ஏங்கல்ஸ் அனுப்பிய ஐந்து பவுன் நிலைமையை மாற்றியது.
வைத்தியம் பார்த்தவனுக்கு கடன் செலுத்த முடியாமல் வழக்குத் தொடர்வேன்,
வீட்டிற்கு கரண்டு தண்ணீர் சப்ளை நிறுத்திவிடுவேன் என மிரட்டிய போது மார்க்ஸ் யாருக்கும் தெரியாமல் மான்செஸ்டர் ஓடிப்போனதும் உண்டு.
1881ல் ஜென்னியும் 1883ல் மார்க்சும் இறந்து போகின்றனர்.
வறுமை சூழ்ந்த வாழ்வில் தான் 1848ல் கம்யூனிஸ்ட் அறிக்கையும் 1867ல்
"காபிடல்" முதல் தொகுதியும் மறைவிற்கு பின் 1883 மற்றும் 1894ல் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளும் வெளியாகின.
உற்ற தோழன் ஏங்கல்ஸ், மார்க்ஸ் இறப்பில் மயான உரையில் மார்க்ஸ் இறந்துவிட்டான் எனச் சொல்ல வில்லை. மார்க்ஸ் தான்
சிந்திப்பதை இன்றுடன் நிறுத்திக் கொண்டான் என்றார்.
1895ல் ஏங்கல்ஸ் மரணமடைந்தார்.
உலகு போற்றும் இலட்சியவாதிகள் வாழ்க்கை பெரும்பாலும் துயரைத் தான் தோழமை பூண்டதாய் இருந்துள்ளது.
-கா. செல்வராஜ்
மே 02, 2023
தோழர். A. அந்தோணி ABPM GDS MD பிளார் BO பணி நிறைவு-பாராட்டல்
பணி நிறைவு-பாராட்டல்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
கல்லல் So பிளார் Boவில் கடந்த 42 ஆண் டுகளாக ABPM (GDS mD)யாக பணியாற்றி வரும் மூத்த Al GDSU உறுப்பினர் தோழர். A. அந்தோணி அவர்கள் 02 - 05 -23 செவ்வாய்கிழமையன்று பணி ஓய்வுபெறவுள்ளார்கள் என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம்.
பணி ஓய்வுகாலம் முழுதும் ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும், குடும்ப சகிதத்தோடும், பல்லாண்டுகாலம் வாழ்ந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்,
தோழமையுடன்...
K. மதிவாணன்,
செயலர் P3
P. நடராஜன்
செயலர் P4
S.செல்வன்
செயலர் AIG D SU
சிவகங்கை DN
உணர்வடையுங்கள்...! அல்லது உடைக்கப்படுவீர்கள்...!
NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!
NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சிவகங்கை தலைமை அஞ்சலகம் அருகில் இன்று 01.05.2023 அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்-அஞ்சல் நான்கு, மற்றும் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் நடைபெற்றது!
மே 01, 2023
மேதின வாழ்ததுக்கள்-2023
பொய்ப் புகார் அடிப்படையில் அற்பக் காரணங்களை சொல்லி பறிக்கப்பட்ட மாபெரும் அமைப்பான NFPE சம்மேளனத்தின் மற்றும் AIPEU Group C சங்கத்தின் அங்கீகாரத்தை தொடர் போராட்டத்தின் மூலம் திரும்பப் பெற இன்றைய மேதினத்தில் சபதமேற்போம்.
அனைத்து தோழமைகளுக்கும் மேதின நல்வாழ்த்துக்கள்!
சிவகங்கை கோட்டத்தில் பல்வேறு அலுவலகங்களில் நடைபெற்ற மேதின கொடியேற்று நிகழ்வின் புகைப்படங்கள்!
சிவவகங்கை HO
திருப்பத்தூர் SO
கல்லல் SO
மதகுபட்டி SO
திருப்புவனம் SO