பணி ஓய்வு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணி ஓய்வு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஜனவரி 09, 2024

தோழர் M.குழந்தை ABPM பணி ஓய்வு

 நிறைவான _ பணி ஓய்வு நிகழ்வு :


சிவகங்கை கோர்ட்ஸ் Soவில் பேக்கராக பணியாற்றி வந்த தோழர் - குழந்தை அவர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி நிரலை தோழர். அம்பிகாபதி AlGD SUதலைவர் மற்றும் P3 ன் செயலர் தோழர்.மதிவாணன் அவர்களின் கூட்டுத் தலைமையிலும், P3 ன் உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தேறியது.

பணி ஓய்வு நிகழ்விற்கு பல பகுதியிலிருந்து பெருவாரியான தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, சிறப்பித்தது பெருமை கொள்ளும் படி அமைந்தது.

மேலும் நமது கோட்டத்தின் தொழிற்சங்க வழிகாட்டல் முன்னோடிகளும், பணி ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் களுமான மரியாதைக்குரிய தோழர்.செல்வராஜ் அவர்களும், தோழர் .சேர்முகப் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு தோழருக்கு பொன்னாடை போற்று மகிழ்வித்தனர்.

முச்சங்கங்களின் சார்பாக தோழருக்கு நினைவு பரிசு கெளரவித்தனர்.

கோட்ட சப்-டிவிசன் நிர்வாகம் சார்பாக பணி ஓய்வு பெற்ற தோழருக்கு சிறந்த பணி சேவையாற்றியமைக்கான நற்சான்றிதழ் - விருதும் மற்றும் கிராஜிட்டி / செவரன்ஸ் தொகைக்கான உத்திரவு ஆனையினையும் , மரியாதைக்குரிய, சிவகங்கை உபகோட்ட அதிகாரி (ip) அவர்கள் வழங்கி மரியாதை செய்து கௌரவித்தார். கோட்ட அதிகாரி மற்றும் உப-கோட்ட அதிகாரி அவர்களுக்கு கோட்ட சங்கங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இறுதியாக கதாநாயகனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.







ஜூன் 30, 2023

தோழியர் S.லலிதா SPM திருப்புவனம் பணி ஓய்வு விழா!

பணி நிறைவு - பாராட்டு
💞🌸💞🌸💞🌸💞🌸

சிவகங்கை கோட்டம் திருப்புவனத்தில் உதவி போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து வரும் NF PEயின் பேரியக்க சங் க உறுப்பினரான மூத்ததோழியர்.S. லலிதா அவர்கள் வரும் 30 | 6 | 2023 வெள்ளிக்கிழமையன்று இலாக்கா பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்கள்.

அவர் எப்போதுமே இன் முகத்துடன் எந்த வித வேறுபாடின்றி அனைத்து பிரிவு ஊழியர்களிடத்திலும் அன்பாக பேசி பழகக் கூடிய தொழிற்சங்க பிடிப்பு மிக்க உன்னதமான தோழியர். தொழிற்சங்க நிகழ்வுகளில் தவறாது கலந்து கொள்வதோடு மட்டுமின்றி, சங்க வரலாற்று செய்தியினை சுவைபட பேசி ஊழியர்களிடத்தில் கொண்டு சேர்ப்பவர் தோழியர். லலிதா அவர்கள்.

அவரின் பணி ஓய்வுகாலங்கள் முழுதும், ஆரோக்கியம், மகிழ்ச்சி, அமைதி நிறைந்ததாக அமைந்திட கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.'

இடம்: திருப்புவனம் அஞ்சலகம் .

நேரம் : மாலை 4.30 மணி

நாள் : 30 - 06-23 வெள்ளிக்கிழமை

தோழமையுடன் .'

K.மதிவாணன்,
செயலர் - P3

P. நடராஜன்
செயலர் -P 4

S செல்வன்
செயலர் AI GD SU
சிவகங்கை DN
💞💕🌷💞🌸🌷💕🌸🌷💕💞