ஜூலை 10, 2023

தோழர் D.ஞானையா நினைவு தினம் 8.7.2023

தோழர் D.ஞனையா அவர்களுக்கு சிவகங்கை HO வில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

தோழர் D.ஞானையா நினைவு தினம்

தோழர் D. ஞானையா மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுவிக்கோட்டை என்ற ஊரில் 7.1.1921 அன்று பிறந்தார். 1941ல் கரூரில் அஞ்சலக எழுத்தராக பணியைத் துவக்கினார்.


இராணுவ அஞ்சல் சேவையில் சில காலம் பணியாற்றிய பின் திருச்சிக்கு திரும்பினார். அங்குதான் அவர் தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்தார். உதவிக்கோட்டச் செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE யின் செயலராக 1963லும், NFPTE யின் மாபொதுச்செயலராக 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மத்திய அரசு ஊழியர்கள் நடத்திய 19.9.1968 ஒருநாள்வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தினார் அதற்காக ஜெயில், சஸ்பென்ஷன், டிஸ்மிஸ் என தண்டனைகளைப் பெற்றவர். அதன் மூலம் மத்திய அரசு உழியர்கள் சங்கங்களுக்கிடையே NFPTE அமைப்புக்கு எனத் தனிப்பெருமை சேர்த்தார். JCM (Joint| | Consultative Machinory) கூட்டு ஆலோசனைக்குழு 1966ம்ஆண்டு அமைக்கப்பட்டது. அரசுடன் பலகட்ட பேச்சுவர்த்தை நடத்தி அதை அர்த்தமுள்ள அமைப்பாக மாற்றினார். NFPTE யின் மாபொதுச் செயலராக இருந்தபோது பல நாடுகளிலுள்ள தொழிற்சங்க அமைப்புகளின் அழைப்பின் பேரில் அங்கு சென்று சர்வதேச அரங்குகளில் உரையாற்றி இந்திய அஞ்சல் ஊழியருக்கு பெருமை சேர்த்தார்.


அஞ்சல்துறை தந்த அரிய முத்து அபாரமான நினைவாற்றல் கொண்டவர் ஒப்பற்ற அறிவு ஜீவி; மார்க்சிய அறிஞர். இந்திய வரலாறு, சீன எல்லைப் பிரச்சனை பாகிஸ்தான் பிரிவினை, சமூக நீதி, பென்கள் முன்னேற்றம் என எல்லா விஷயங்களிலும் பரந்துபட்ட ஞானம் உள்ளவர். வாசிப்பதும் எழுதுவதும் அவரோடு ஒட்டிப் பிறந்தவை. தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களும், நூற்றுக்கணக்கான சிறுபிரசுரங்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.


NFPTE இயக்கத்தின் வைர விழா மாநாட்டை நமது கோட்டச்சங்கம் அஞ்சல் நான்கு GDS சங்கங்களோடு சேர்ந்து 2014ல் சிவகங்கையில் நடத்தியபோது தனது 93 வது வயதிலும் மிக ஆர்வமாக ஒரு இளைஞரைப் போல் கலந்து கொண்டு உரையாற்றி நமது கோட்டத்துக்கு பெருமை சேர்த்தார்.


 தனது 97-வது வயதில் 8.7.2017 அன்று கோயம்புத்தூரில் காலமானார். வருகிற 8.7.2022ல் அவரது ஐந்தாவதுநினைவு தினம் வருகிறது. அன்றைய தினத்தில் அவருக்கு நம் கோட்டம் முழுவதும் அஞ்சலி செலுத்துவோம். அவரது நினைவுகளைப் போற்றுவோம் அவரைக் கற்போம்; அவர் காட்டிய போராட்டப் பாதையில் பீடு நடை போடுவோம்.
கொண்டாடப்பட்டு வருகின்றன.


சிவகங்கை கோட்ட அஞ்சல் மூன்று சங்க ஈராண்டறிக்கை 19.06.2022

கருத்துகள் இல்லை: