மார்ச் 08, 2022

மகளிர் தினம்

 சமைக்கின்ற கரங்களும் சரித்திரம் படைப்பதை பூமி பார்க்கவேண்டும் என்ற கற்பனை வரிகள் உண்மையாகிவிட்டது.


தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலிலும்கூட பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு அடிப்படையில் மொத்த 21மேயர்களில் 11மேயர்கள் பெண்கள்தான்.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களில் 102 பேர்கள் பதவியேற்றுள்ளனர்.


சொத்திலும் சரி, வேலைவாய்ப்பிலும் சரி, 30% இடஒதுக்கீடு முறை இப்போதும் நடைமுறையில் இருந்து வருகின்றது.


1989ல் துவங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுவில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.


அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி சரித்திரம் படைத்து வரும் பெண்களுக்கு/இன்றைய நாள் இனிய நாளாக, வீரம் விளைந்த நாளாக கருதி நமது தோழியர்கள் அனைவருக்கும், மகளிர் தின நல்வாழ்த்துக்களை கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை: