ஜனவரி 06, 2024

தோழர் M.நரசிங்கபெருமாள் BPM செங்குளிபட்டி பணி ஓய்வு விழா!

 சிறப்பான பணி ஓய்வு - பாராட்டல் :


கடந்த 06-01-24 அன்று நடராஜபுரம் So/செங்குளிப்பட்டி Bo வில் GDSB PM ஆக பணியாற்றி வந்த மூத்ததோழர்.நரசிங்க பெருமாள் அவர்கள் பணி ஓய்வு பாராட்டல் நிகழ்வு தோழர்.நெடுஞ்செழியன் Spm மற்றும் AlGD SUன் தலைவர் தோழர்.அம்பிகாபதி ஆகியோரின் கூட்டுத் தலைமையிலும், NF PE - P3 பேரியக்க உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் வெகு சிறப்பாக அமைந்தது.

கோட்ட முச்சங்கங்களின் சார்பாக தேnழருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்ததும், அப்பகுதியினை சார்ந்த ஊழியர் அனைவரும் ஒரு சேர ஒரு கூட்டுக் குடும்பமாக இணைந்து பொன்னாடை, மாலை, மற்றும் இனிப்புகள் வழங்கி அவருக்கு பாராட்டல் மரியாதை செய்த விதம் பெருமை கொள்ள வைத்தது.

இறுதியாக அவரின் ஏற்புரை அனைவரின் மனதிலும் நெகிழ்வினை ஏற்படுத்தி, கண் கலங்க வைத்தது.

கோட்ட சப்-டிவிசனிலிருந்து உப-கோட்ட ஆய்வாளர் அவர்கள், பணி ஓய்வு பெற்றதோழரை , நேரில் வந்து வாழ்த்தி மரியாதை செய்ததோடு, அவருக்கு சேர வேண்டிய கிராஜிட்டி மற்றும் செவரன்ஸ் தொகையினை வழங்கி ஊக்குவித்ததோடு, கோட்ட நிர்வாகம் சார்பாக . அவருக்கு சிறப்பாக பணியாற்றியமைக்கான 'நற்சான்றிதழ்' விருதினையும் கொடுத்து மென்மேலும் கௌரவித்தது மிகவும் நிறைவான மகிழ்வினை ஏற்படுத்தியது.

கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கும், உப ேகாட்ட ஆய்வாளர் (ip) அவர்களுக்கும், சப்-டிவிசன் தோழர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.




கருத்துகள் இல்லை: