மே 06, 2023

அங்கீகார ரத்தை வாபஸ் வாங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

 படை திரண்டு வாரீர்!

வாரீர்! தோழமைகளே!

நமக்கு பாதுகாப்பு கொடுத்து, முழு உரிமைகளையும், சலுகைகளையும் வழங்கிவருகின்ற பாரம்பரிய தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தினை முடக்கிவைத்திருக்கின்ற அஞ்சல் இலாக்கா மற்றும் மத்திய அரசினைக் கண்டிக்கும் வகையில் நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் செய்திட தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருக்கின்றது.

அதனடிப்படையில் வரும் 09 - 05 - 2023 மாலை 6 மணியளவில் சிவகங்கை கோட்ட அலுவலகம் முன்பாக ஆர்ப்பரிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது என்பதனை தெரியப்படுத்திக்கொள்கின்றோம். அதற்குரிய நோட்டீசும் அனைவருக்கும் கிடைத்திருக்கும் என நினைக்கின்றோம்.

தயவுசெய்து செய்திகளை படித்துவிட்டு வெறுமனே நின்றுவிடாமல் சிவகங்கை வந்துசேரவும். முக்கியமாக SPM's தோழமைகள் அனைவரும் அலுவலகப்பணியினை முடித்துவிட்டு மாலை6 மணிக்கெல்லாம் வந்துசேர சரியாக இருக்கலாம்.

அங்கீகார பறிப்பினை கண்டித்து Al GDSU சங்கங்களும் போர்க்கொடி தூக்கி தார்மீக ஆதரவு தந்துபோராடி வருகின்றது.

தமிழ் மாநில AlGDSU மற்றும் அகில இந்திய AlGDSU சங்கங்களுக்கு சிவகங்கை கோட்ட சங்கங்கள் வீரமிகு போராட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது. தொழிற்சங்கம் என்பது அனைவருக்குமே பாதுகாப்பான ஆயுதம் என நிருபனமாகியிருக்கின்றது.

தோழமையுடன்...

P. நடராஜன்,

செயலர் - P4

Sசெல்வன்,

செயலர் Al GDSU

சிவகங்கை DN






கருத்துகள் இல்லை: