ஏப்ரல் 29, 2023

தொழிற்சங்க அங்கீகார ரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


இடம்: சிவகங்கை தலைமை தபால் அலுவலகம் முன்பாக


நேரம் : மாலை 5 மணி


NFPE சம்மேளனம் மற்றும் AIPEU Gr-C சங்கங்கதிற்கு ரத்து செய்திட்ட அங்கீகாரத்தினை திரும்ப பெற வலியுறுத்தி



அன்பார்ந்ததோழர்கள்/தோழியர்களுக்கு வணக்கம்!


அகில இந்திய அளவில் செயல்பட்டு வருகின்ற பேரியக்க சங்கங்களின் (NFPE & AlPEU- Group - C/தேசீய அஞ்சல் ஊழியர் சம்மேளனம்/அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம்-குரூப்-சி,) அங்கீகாரத்தினை ரத்து செய்த ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒன்றிய மத்திய அரசு மற்றும் அஞ்சல் இலாக்காவினை கண்டிக்கும் வகையில் நாடெங்கிலும் பலதரப்பட்டபோராட்டத்தினை நடத்திட மத்திய, மாநில சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.


NFPE பேரியக்கத்தைபழிவாங்கும் நடவடிக்கையினை மத்திய அரசு கையில் எடுத்திருக்கிறது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.


ஊழியர் நலனே பெரிதெனக் கொண்டு பலதரப்பட்ட வீரமிகு போராட்டங்களை நடத்தி, பாதுகாப்புமிக்க சலுகைகளை வென்றெடுத்தவரலாற்று பாரம்பரிய பேரியக்கம்தான் நமது தேசீய அஞ்சல் ஊழியர் சங்கம்.


 ஆட்சிக்கேற்ற, சீசனுக்கேற்ற, கானல்நீர் போன்று தோன்றி மறைந்திடும் காகித லெட்டர்பேர்டு சங்கத்தினில் அப்பாவி தோழர்கள் ஒரு சிலர் மாய்ந்து, வீழ்ந்து போய்கிடப்பதை எண்ணும்போது பரிதாபமாக இருக்கின்றது.


எனவே வரலாற்று பேரியக்க சங்கங்களுக்கு அங்கீகாரத்தை ரத்து செய்த மோசமான உத்தரவினை வாபஸ் வாங்கிட நாளை 01/05/23 மே தொழிலாளர் தின நாளன்று நமது NFPE சம்மேளன செங்கொடி ஏற்றி உரக்க கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திட திரண்டு வாரீர்! வாரீர்! தோழர்களே சிவகங்கை தபால் அலுவலகம் முன்பாக.


வழங்கம் போல நமது கோட்ட தோழமை சங்கங்களின் ஆதரவுடன் (Al GDSU மற்றும் NFPE - P4) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதனை தெரியப்படுத்தி, அனைத்து தோழமை சொந்தங்களும் பெருவாரியாக கலந்துகொண்டுபோராட்டத்தினை வெற்றியடையச் செய்திடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கருத்துகள் இல்லை: