நவம்பர் 08, 2020

காளையார்கோவில் பகுதி கூட்டம் 07.11.2020

                              அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கங்களின் சார்பில் காளையார்கோவில் SO -வில் பகுதி கூட்டம் நடைபெற்றது. காளையார்கோயில், சருகணி, திருவேகம்ப்பத்தூர், மற்றும் மங்களம்  அஞ்சல் அலுவலகங்கள், அதன் கீழுள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களின் தோழர், தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


                   ஊழியர்களின் பிரச்சனைகளை கேட்டறியப்பட்டது.  தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்து  26.11.2020 அன்று நாடுதழுவிய அளவில் நடைபெறும் ஒருநாள் வேளை நிறுத்தத்தின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.  தலமட்ட பிரச்சனைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.  நமது அஞ்சல் மூன்று முன்னாள் கோட்ட செயலாளரும் முன்னாள் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் அமைப்புச்செயலாளறுமாகிய தோழர் K.செல்வராஜ் அவர்கள் பகுதிகூட்டத்தில் கலந்துகொண்டு கோட்டச்சங்கங்களின் பாரம்பரியம்மிக்க செயல்பாடுகள் குறித்து   சிறப்புரை வழங்கினார்!  

   தோழர் K.S அவர்கள் எதிர்பாராமல் வந்திருந்து பகுதிக்கூட்டத்தை  சிறப்பித்தது அனைவருக்கும் எழுச்சியூட்டு வதாக இருந்தது.





கருத்துகள் இல்லை: