செப்டம்பர் 04, 2010

GDS   ஊழியருக்கான புதிய பென்ஷன் திட்டம் .. ௦ ௦




1 பழைய ஊழியர் ஏற்கனவே உள்ள சிவேரன்ஸ் திட்டம் அல்லதுபுதிய பென்ஷன் திட்டம் - இரண்டில் ஒன்றில் சேரலாம்.


2 . 1 .1 .2011 முதல் பணியில் சேரும் ஊழியருக்கு இது கட்டாயமாகஅமல் படுத்தப்படும் .


3. ஊழியர் தரப்பில் எந்த பிடித்தமும் கிடையாது . இலாக்கா தரப்பில்


இருந்து ரூ .200 மாதா மாதம் போடப்படும்.


4 . ஒரு வருட சேவை முடிந்திருந்தாலே இதில் சேரலாம்.
5 . 1 .1 .2011 அன்று 3 வருடத்திற்கு குறைவான பணிக்காலம் உள்ளவர்கள் இதில் சேர முடியாது.


6 . ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் இதில் சேர்ந்தால் அவர்களுக்கு
சேரும் தேதி வரை உரிய சிவேரன்ஸ் தொகை , வருடத்திற்கு ரூ. 1500


வீதம் இந்த பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்படும்.
7 . பணியில் உள்ள ஊழியர் பதவி உயர்வு பெற்று இலாக்கா ஊழியர் ஆனால் , அவர்களது பென்ஷன் திட்டத்தில் சேர்ந்துள்ள தொகை ,
இலாக்கா ஊழியருக்கான பென்ஷன் திட்டத்தில் ஊழியர் கணக்கில் சே ர்க்கப்படும் .


8 . பணி ஓய்வு பெரும் பொது ஊழியர் கணக்கில் உள்ள தொகையில் 60 % ஊழியர் எடுத்துக்கொள்ளலாம் . மீதமுள்ள 40௦% இன்சூரன்ஸ்பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


9 . புதிய பென்ஷன் திட்டத்தில் சேருவதர்க்கான விண்ணப்பங்கள்15 .9 .10 தேதிக்குள் அளிக்க வேண்டும்.

10 . அப்படி அளிக்க வில்லை என்றால் அந்த ஊழியர் பழைய சிவேரன்ஸ்திட்டத்தில் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும்.


11 . ஒரு முறை அளிக்கப்பட ஏற்ப்பு மனு மறு முறை மாற்றப்படமாட்டது.
12 . ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டாலோ டிஸ்மிஸ் செய்யப்பட்டாலோ அவர்களுக்கு பென்ஷன் தொகை எதுவும் கிடைக்காது.

கருத்துகள் இல்லை: