ஜூன் 30, 2012

அஞ்சல் பணி ஓய்வு பெரும் தலைவர்கள்!

 தோழர் P.ஆதிமூலம்!

நமது கோட்ட P3 சங்க தலைவர், பல நெருக்கடி காலங்களில் தொழிற் சங்கத்தை கட்டிக்காத்த தலைவர்!,  தொழிற்சங்க வழிகாட்டி!, சிறந்த கட்டுரையாளர்!, இலக்கிய ஆர்வலர்  தோழர் P.ஆதிமூலம் அவர்கள் இன்று அஞ்சல் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்!.  இந்த சிவகங்கை கோட்ட  AIPEU சங்கம் வழுவானதாகவும்,  மூன்று சங்கங்களும்(எழுத்தர், தபால்கரர், புறநில ஊழியர் )  ஒற்றுமையுடனும்  செயலாற்ற பாடுபட்டதில் முக்கிய பங்கு வகித்தவர்!  மாநில சங்கத்திலும் நிர்வாகியாக சிறப்பாக பணியாற்றியவர்!  இலக்கிய, தொழிற்சங்க அரங்குகளில் துடிப்புடன் ஒரு இளைழரை போல் பங்கு கொண்டு பல ஆக்கபூர்வமான  கருத்துக்களை பதிவு செய்தவர்! அவர் நீண்ட காலம் உடல் நலத்துடன் இருந்து இந்த தொழிற்சங்கதிற்க்கு வழிகாட்ட வேண்டும் என்பதே அனைத்து அஞ்சல் ஊழியர்களின் விருப்பம்.  அவர் கட்டிக்காத்த தொழிற்சங்கம், அவர்  சுட்டிக்காட்டிய வழியில் அஞ்சல் ஊழியர்கள்  நலனுக்காக   தொடர்ந்து போராடும்!. 
தோழர் தங்கவேலு!

மானாமதுரை தலைமை அஞ்சல் அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டரும், நமது P3 சங்க உதவி தலைவருமான தோழர் தங்கவேலு அவர்களும் இன்று  அஞ்சல் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்கள்!.    மானமதுரை தலைமை அஞ்சலகத்தை ஒரு பசுஞ்சோலையாக மாற்றி பராமரித்தவர்,  இளமையில் மனைவியை இழந்தபோதும் தன மூன்று குழந்தைகலுக்காக மறு திருமணம் செய்யாமல் நன்கு வளர்த்து ஆளாக்கியவர்,  இவரை போன்றவர்கள் இந்த துறையில் இருப்பதால் தான் இந்த அஞ்சல் துறை ஒரு நேர்மையான  துறையாக விளங்குகிறது என்று கூறும் அளவிற்கு மிகவும் நேர்மையானவர். இறக்க குணம் படைத்தவர்.  அநீதி கண்டு கடும் கோபபும் மற்றவர்  துன்பம் கண்டு கண்ணீர் விடுவதும்  இவரின் இயல்பு.  நமது தொழிற்சங்கத்தின் மீது இறுதிவரை பற்று கொண்டவர்.  இவர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழ நமது AIPEU -ன்  மூன்று  சங்கங்களும் வாழ்த்துகிறது!


1 கருத்து:

SriVenkatesh, J. சொன்னது…

My fraternal Greetings to the retired comrades. My revolutionary salute to Com. Adimoolam for a peaceful retired life. I am 100% sure that his guidance and support will be available for the organisation in the future to him. Please convey my regards to both the comrades esp. Com.Adimoolam.
J. SRIVENKATESH,
CIRCLE PRESIDENT.