ஜனவரி 09, 2024

தோழர் M.குழந்தை ABPM பணி ஓய்வு

 நிறைவான _ பணி ஓய்வு நிகழ்வு :


சிவகங்கை கோர்ட்ஸ் Soவில் பேக்கராக பணியாற்றி வந்த தோழர் - குழந்தை அவர்களின் பணி ஓய்வு நிகழ்ச்சி நிரலை தோழர். அம்பிகாபதி AlGD SUதலைவர் மற்றும் P3 ன் செயலர் தோழர்.மதிவாணன் அவர்களின் கூட்டுத் தலைமையிலும், P3 ன் உதவி கோட்ட செயலர் தோழர். நாகலிங்கம் அவர்களின் முன்னிலையிலும் சிறப்பாக நடந்தேறியது.

பணி ஓய்வு நிகழ்விற்கு பல பகுதியிலிருந்து பெருவாரியான தோழர்கள் /தோழியர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி, சிறப்பித்தது பெருமை கொள்ளும் படி அமைந்தது.

மேலும் நமது கோட்டத்தின் தொழிற்சங்க வழிகாட்டல் முன்னோடிகளும், பணி ஓய்வு பெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் களுமான மரியாதைக்குரிய தோழர்.செல்வராஜ் அவர்களும், தோழர் .சேர்முகப் பாண்டியன் அவர்களும் கலந்து கொண்டு தோழருக்கு பொன்னாடை போற்று மகிழ்வித்தனர்.

முச்சங்கங்களின் சார்பாக தோழருக்கு நினைவு பரிசு கெளரவித்தனர்.

கோட்ட சப்-டிவிசன் நிர்வாகம் சார்பாக பணி ஓய்வு பெற்ற தோழருக்கு சிறந்த பணி சேவையாற்றியமைக்கான நற்சான்றிதழ் - விருதும் மற்றும் கிராஜிட்டி / செவரன்ஸ் தொகைக்கான உத்திரவு ஆனையினையும் , மரியாதைக்குரிய, சிவகங்கை உபகோட்ட அதிகாரி (ip) அவர்கள் வழங்கி மரியாதை செய்து கௌரவித்தார். கோட்ட அதிகாரி மற்றும் உப-கோட்ட அதிகாரி அவர்களுக்கு கோட்ட சங்கங்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

இறுதியாக கதாநாயகனின் ஏற்புரை மற்றும் நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது.







கருத்துகள் இல்லை: