நவம்பர் 03, 2020

திருப்பத்தூர் பகுதிக்கூட்டம் 03.11.2020

                        அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு மற்றும் புறநிலை ஊழியர் சங்கங்களின் சார்பில் திருப்பத்தூர் SO -வில் பகுதிக்கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர், கண்டரமாணிக்கம், கண்டவராயன்பட்டி, திருகோஷ்டியூர், ஏரியூர், திருப்பத்தூர் B.S ,  SMH அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் அதன் கீழுள்ள கிளை அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும்  தோழர், தோழியர்கள் திரளாக கலந்துகொண்டனர். பகுதி நிர்வாகிகள் சிறப்பான ஏற்படுகளை செய்திருந்தனர். 

                        ஊழியர்களின் பிரச்சனைகள் கேட்டறியப்பட்டது.  தொழிலாளர் பிரச்சனைகளை முன்வைத்து  26.11.2020 அன்று நாடுதழுவிய அளவில் நடைபெறும் ஒருநாள் வேளை நிறுத்தத்தின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது.  தலமட்ட பிரச்சனைகளை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

                         கோட்ட மாநாட்டில் கலந்துகொள்வதுபோல், அனைத்து தோழர், தோழியர்களும் எழுச்சியுடன் கலந்துகொண்டது உத்வேகம் தருவதாக அமைந்தது.








கருத்துகள் இல்லை: