அக்டோபர் 09, 2020

Comrade Bapu Tarapada Mukherji , the pioneer of Indian Postal and Telegraphs Trade Union Movement - His Presidential Address on 09.10.1921 in Lahore conference a Historic Document

 




நூறாண்டைநெருங்கும் உரை- நமக்கு வழிகாட்டும் ஒரு வரலாற்று ஆவணம்*

 

வங்கம் தந்த சிங்கம் பாபு தாரபாதா முகர்ஜி  இந்திய தபால் தந்தி துறையின் தொழிற்சங்க பிதாமகன்.

அப்போது  09.10.1921  முதல்  11.10.1921 வரை நடைபெற்ற  லாகூரில்  அகில இந்திய மாநாடு லாகூரில் நடைபெற்றது . அம் மாநாட்டின் துவக்க நாளன்று அதாவது 09.10.1921 அன்று அவர் ஆற்றிய உரை தபால் தந்தி ஊழியர்களுக்கு மட்டுமல்ல இந்திய தொழிலாளி வர்க்கத்திற்க்கு வழிகாட்டும்  ஒரு  வரலாற்று ஆவணம்  . 99  ஆண்டுகள் கடந்த பிறகும் கூட இப்போதும்  அவரது உரை மிகப் பொருத்தமாக உள்ளது . அவரது உரையின் முக்கிய வரிகளை இன்றும் இந்திய தொழிலாளி வர்க்கம் அதன் கோஷமாக முழக்கிக் கொண்டிருக்கிறது .

 

பணிநீக்கம்

அவரது உரையால் ஆத்திரம் அடைந்த  வெள்ளையர் அரசாங்கம்  அரசுக்கு எதிராக அவர் பேசியதை சுட்டிக்காட்டி அவருக்கு குற்றப்பத்திரிகை அனுப்பியது . குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டு  மன்னிப்புக்கேட்க சொன்னது , மன்னிப்பு கேட்டால் பதவி உயர்வு தருகிறோம் என்று ஆசை காட்டியது . அதற்கு அவர்  மயங்கவில்லை . நான் பேசியது தவறு என்று மன்னிப்பு கேட்டால் எனக்கு நானே பொய்யன் ஆகிவிடுவேன் . எனவே மன்னிப்புக் கேட்க மாட்டேன் , நான் பேசியது அனைத்தும் உண்மையே என்று துணிச்சலாக  பதில் சொன்னார் .

 

 வரமான பணிநீக்கம்

எனவே அவரது  அந்த  லாகூர் உரைக்காகவே அன்றைய இந்திய பிரிட்டிஷ் அரசு அவரை பணிநீக்கம் செய்தது . அந்த பணிநீக்கமே தபால் தந்தி தொழிலாளர்களுக்கு வரமானது . அதன் பின் முழுநேர தொழிற்சங்க தலைவராக இந்தியா முழுதும் சென்று தபால் தந்தி ஊழியர்களை தட்டி எழுப்பி தபால் தந்தி பகுதியில் உறுதியான தொழிற்சங்கத்திற்கு  அஸ்திவாரம் இட்டார் . 1929 ல் அவர் இறக்கும் வரையில் தனது தொழிற்சங்க பணியில் மிகவும் தீவிரமாக செயல்பட்டார்.

 

முதல் முழக்கம்

அவரது வீர உரையும் அவரது தியாக வரலாறும்

“முதல் முழக்கம் - பாபு தாராபாதா முகர்ஜியின் வரலாறும் வீர உரைகளும்”  என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது .பாவை பப்ளிகேஷன் வெளியிட்ட அந்த புத்தகத்தின் ஆசிரியர்  திரு  அ.சோமசுந்தரம். இன்றைய இளைய தலைமுறை அவரது முழு உரையையும் படிக்கவேண்டும் .

 

லாகூர் உரையின் சாரம்-“organize-ஒன்றுபடு”  என்பதே 

அவரது லாகூர் உரையின் சாரமே organize அதாவது ஒன்றுபடுங்கள்  என்ற தொழிலாளி வர்கத்தின் தாரக மந்திரத்தை வலியுறுத்துவது தான் . “ Organize என்ற சொல்லுக்கு செயல்வடிவம் கொடுங்கள்  அதன் மூலமே உங்களது   துன்ப துயரங்கள் தீரும்”   என்பதே தொழிலாளர்களுக்கு  பாபு தாராபாதா முகர்ஜி  தொடந்து சொல்லிவரும் செய்தி .

 

அவரின் முழக்கங்கள் சில

அவரின் சில முழக்கங்களை இன்றும் தொழிற்சங்க ஆர்ப்பாட்டங்களிலும் போராட்டங்களிலும் முழங்கிக் கொண்டு இருக்கிறோம். அவற்றை மீண்டும் நினைவுகூர்வோம்.  


"Ah Brothers, workers are not beggars;  they are the salt of the earth they are the only people who produced wealth

 

 *தொழிலாளி கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல . உலகத்தின் அத்தனை செல்வத்தையும் அவனே படைக்கிறான் . எனவே  இந்த மண்ணின் சாரம்சம் அவனே.*  

 

Consider, brothers, what this world would be, were the workers to stop work Not a grain of cereals would be produced, not a yarn would be spun and woven, not a brick would be laid, not a tenement would be built”

*தொழிலாளர்கள் தங்கள் வேலையை நிறுத்திவிட்டால் இந்த உலகம் என்னவாகும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு குண்டுமணி தானியம் கூட விளையாது; ஒரு முழம் துணி கூட உருவாகாது; ஒரு செங்கல் கூட அசையாது.  எந்த ஒரு கட்டிடமும் எழும்பாது*

 

"Take it from me, Brothers, that petitions and memorials and supplications will count for nothing as long as you do not organise yourselves in a manner to convince the Government that you will no longer stand nonsense

 

நாம் காட்டும் அலட்சியத்தையும் அவமானத்தையும் இவர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில்  நீங்கள் ஒன்றுபடாத வரை உங்களது கோரிக்கை மனுக்களும்   பெட்டிசன்களும் உங்களுக்கு எந்தவித பலனையும் அளிக்கப்  போவதில்லை

 

 

You have immense potentiality capable of moving heaven and earth Organise this power Organise with a purpose.  Organise with determination." and I promise you success will knock at your door

 

நீங்கள் விண்ணையும் மண்ணையும் அசைக்கும் பேராற்றல் உடையவர்கள் . அந்த வலிமையை ஒன்று திரட்டுங்கள் ; ஒரே நோக்கத்தோடு ஒன்றுபடுங்கள் ;  அதிலும் உறுதியோடு ஒன்றுபடுங்கள் . இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒன்றுதிரண்டால் வெற்றி நிச்சயம் உங்கள் கதவுகளை தட்டும்

 

 

Brother, shake off the hypnotic spell, the somnambulence of past life, wake up and be self-conscious appraise your value at its real worth. Don’t remain forgetful of dignity of labour, realise your own strength , march double quick to the goal with heart within and God overheard

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

நமது தொழிற்சங்க பிதாமகன் தோழர் பாபு தாராபாதா முகர்ஜி சொன்ன ஒன்றுபடு போராடு வெற்றிபெறு  என்ற திசைவழியில் நாம் ஒன்றுபடுவோம் போராடுவோம்  வெல்வோம். பாபு தாராபாதா முகர்ஜியும்   மகாகவி பாரதியும் ஒரே மாதிரித்தான் சொல்லியிருக்கிறார்கள் .

 

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிதைத் தேர்ந்திடல் வேண்டும் இந்த
ஞானம் வந்தால் பின்நமக்கெது வேண்டும்

 

என்கிறான் மகாகவி பாரதி .

ஒன்றுபடும் ஞானம் பெறுவோம், நம் முன்னுள்ள பிரச்சனைகள் அனைத்தையும் வென்றெடுப்போம்  

 

---- பி,சேர்முக பாண்டியன் மதுரை

கருத்துகள் இல்லை: