NFPE NFPE NFPE
அகிலஇந்தியஅஞ்சல்
ஊழியர்கள் சங்கம்
(P3,P4,)
சிவகங்கை
கோட்டம்,சிவகங்கை-630561
www.nfpesivaganga.blogspot.com
------------ --------------------------------------------------------------------------------------------------------------------
சுற்றறிக்கை : 25 தேதி : 27-04-2015
6-5-2015 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தம்
அன்புத் தோழர்/தோழியர்களுக்கு வணக்கம் !
கடந்த 28.07.2014 இல் புது டெல்லியில் கூடிய POSTAL JCA
ஊதியக் குழு தொடர்பான கோரிக்கைகள் மற்றும் இலாக்காவில் தேங்கிக் கிடக்கும் பகுதிவாரிக் கோரிக்கைகளை ஒன்றுபடுத்தி 39 அம்சக் கோரிக்கைகளின் மீது நாடு தழுவிய அளவில் நான்கு கட்ட போராட்டம் அறிவித்து தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டம் பின் கடந்த 04.12.2014அன்று புது டெல்லி பாராளுமன்றம் நோக்கிய அஞ்சல் JCA வின் பேரணிநடத்தி மாபெரும் வெற்றியைப் பெற்றது. மீண்டும் 26 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 06.04.2015 அன்று JCA கூடி எதிர்வரும் 06.05.2015 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்வதற்கான சட்டரீதியான வேலை நிறுத்த நோட்டிசை இலாக்காவுக்கு முறையாக வழங்கினர்.
நம் அஞ்சல் துறையின், அரசுத் துறை என்ற கட்டமைப்பு உடைக்கப்பட்டு, பொது மக்கள் சேவைஅடியோடுஒழிக்கப்பட்டு எதிர்காலம் BSNL போல CORPORATE மயமாக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களின் ஆளுமைக்கு கொண்டுவரப்பட உள்ள அநீதியை எதிர்த்துப் போராட, நம் வாழ்வாதாரம் காக்கப்பட நாம் அனைவரும் ஒட்டுமொத்தமாக திரண்டெழுந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
கோரிக்கைகள்:
1. அஞ்சல் இலாக்கா சேவையை CORPORATION மற்றும் தனியார் மயமாக்காதே !
2. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய். 01.01.2004 க்குப் பின்னர் பணியில் அமர்ந்த ஊழியர்களுக்கும் அதற்கு முன்னர் உள்ளதுபோல சட்டபூர்வமான பாதுகாக்கப்பட்ட பென்ஷன் வழங்கி விடு.
3. 01.01.2014 முதல் அனைத்து ஊழியர்களுக்கும், 100 % பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து எல்லா வித பயன்களையும் அதன் மீது வழங்கி விடு .
4. POSTMASTER GRADE ஊழியர்களுக்கு உண்டான பிரச்சினை தீர்த்து வை. IP, GR. B தேர்வு எழுதிட அனுமதி. பதவி உயர்வில் உள்ள சேவைக்கால இடைவெளியை GENERAL LINE ஊழியர்களுக்கு உள்ளது போல , அதற்கு சமமான பதவி உயர்வுகளில் வழங்கி விடு. அனைத்து PSS GR. B, PM GRADE
III, PM GRADE II காலிடங்களையும் நிரப்பிடு. அதற்கு உண்டான தகுதி அடிப்படை பூர்த்தியாகாவிட்டால் அனைத்து காலியிடங்களையும் ADHOC PROMOTION அடிப்படையில் நிரப்பி விடு. POSTMASTER CADREக்கு ஒதுக்கப் பட்ட அனைத்து SENIOR POSTMASTER/CHIEF
POSTMASTER பதவிகளையும் POSTMASTER CADRE
ஊழியர்களைக் கொண்டு நிரப்பிடு . இதற்கான CIRCLE GRADATION LIST வெளியிடு.
5. 01.01.2014 முதல் 25% அடிப்படை ஊதியத்தை அனைத்து ஊழியர்களுக்கும் இடைக்கால நிவாரணமாக வழங்கி விடு.
6. SYSTEM ADMINISTRATOR களுக்கு முழுமையான ROAD MILEAGE
ALLOWANCE வழங்கி விடு. அவர்களின் பணித்தன்மை மற்றும் பணி நேரத்தை வரையறை செய். SYSTEM ADMINISTRATOR களுக்கு தனியான கேடர் உருவாக்கு.
7. கருணை அடிப்படையிலான பணி நியமனங்களில் உள்ள 5% கட்டுப்பாட்டை நீக்கு. பணியில் இறந்த அனைத்து ஊழியர்களின் வாரிசுகளுக்கும் வேலை கொடு.
8. MMS, MTS உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள காலியிடங்களை , , இலாக்கா பணிமூப்பு பதவி உயர்வு , தேர்வு முறை பதவி உயர்வு என்று எல்லா வழிகளிலும் தாமதமின்றி நிரப்பு. காலாவதியான MMS வாகனங்களை மாற்றி புதிய வாகனங்களை வழங்கு .
9. JCM இலாக்கா குழு ஊழியர் தரப்புக்கு அளித்த உடன்பாட்டின்படி கேடர் சீரமைப்புத் திட்டத்தை அஞ்சல் , RMS,
MMS, கணக்குப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உடனே அமல் படுத்து.
10 நிர்வாக மற்றும் RMS அலுவலகங்களில் உள்ளது போல அஞ்சல் பகுதி காசாளர்களுக்கு CASH HANDLING
ALLOWANCE வழங்கி விடு.
11. PO & RMS
ACCOUNTANT களுக்கு வழங்கப்படும் SPECIAL ALLOWANCEஐ பதவி உயர்வுக்கான ஊதிய நிர்ணயக் கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்.
12. I.T.
MODERNISATION PROJECT செயல்படுத்துவதில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் உடனே தீர்த்து வை. உதாரணம் : COMPUTERISATION,
CORE BANKING SOLUTION, CORE INSURANCE SOLUTION ETC.காலாவதியான கணினி, PRINTER உள்ளிட்ட கணினி பயன்பாட்டு சாதனங்களை புதிதாக உடனே மாற்றி வழங்கு. NETWORK மற்றும் BANDWIDTH அளவுகளை உயர்த்து. ஊழியர் விடுப்பு நாட்களில் மாற்று ஊழியருக்கு உண்டான USER CREDENTIAL பிரச்சினைகளை தீர்த்து வை. CBS, CIS செயல்பாட்டில் உள்ள குளறுபடிகளை முழுமையாக களைந்திடாமல் அவசர கதியில்
13. மாதாந்திரப் பேட்டிகள், இரு மாத, நான்கு மாத பேட்டிகள், JCM கூட்டங்கள், WELFARE BOARD, SPORTS BOARD MEETING ஆகியவற்றை முறையான கால அளவீட்டில் நடத்து. இதற்குண்டான உறுப்பினர்களை அங்கீகரிப்பட்ட சங்கங்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உடன் நிரப்பு .
14.. இலாக்கா கட்டிடங்கள், ஊழியர் குடியிருப்புகள், RMS ஒய்வு இடங்கள் போன்றவற்றை புதிதாக கட்டுவதற்கும், பழுது பார்ப்பதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் உரிய நிதி உடனே வழங்கு.
15. தபால்காரர் மற்றும் MTS காலிப் பணியிடங்கள் அனைத்திலும் SUBSTITUTE ARRANGEMENT வழங்கு.GDSபதிலி இல்லாத இடங்களில் காலியிடங்களில் பணிபுரியOUTSIDERகளை அனுமதி
16. DOOR TO DOOR
DELIVERY முறையில் தபால்காரர் பணி நேரத்தை கணக்கிடு. 22.05.1979 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கீட்டு உத்திரவை மாற்றி அமை.
17. L 1 அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்து.
18. SB BRANCH பணிகளை SBCO விடம் திணிக்காதே. SBCO ஊழியர்களுக்கு APAR வழங்கும் பணியை AO (SBCO) விடம் அளி.
19. குறித்த காலத்தில் தரமான சீருடை, காலணி மற்றும் குடை வழங்கு. இதில் உள்ள பழைய அளவீட்டு முறையை மாற்று.
20. GM FINANCE,CHENNAI
யின் ஊழியர்களை பழி வாங்கும் போக்கை தடுத்து நிறுத்து. நூற்றுக்
கணக்கான கணக்குப் பிரிவு ஊழியர்களுக்கு வழங்கப் பட்ட தண்டனையை ரத்து செய்.
21. 2012 இல் நடைபெற்ற JAO POSTAL PART II தேர்வின் மதிப்பெண்களை SC/ST ஊழியர்களுக்கு மறு பரிசீலனை செய்.
22. POSTMAN/MG/ MTS RECRUITMENT RULES மாற்றி அமை. வெளியார் தேர்வு முறையை ரத்து செய். முன்பிருந்தது போல பணி மூப்பு அடிப்படை பதவி உயர்வு முறையை திரும்ப அமை.
இன்னும் பல.
எனவே அகில
இந்தியசங்கத்தின் அறைகூவலின்படி நமது கோட்டத்தில் வழக்கம் போல்நூறு சதவீதம்கழந்து
கொண்டு வெற்றியடைய செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இது கார்பரேட் மயத்திற்கு எதிரான போராட்டம் !
இது தனியார் மயத்திற்கு எதிரான போராட்டம் !
இது நம் துறை காக்கும் போராட்டம் !
இது நம் கோரிக்கைகளை வென்றெடுக்க வாழ்வா சாவா போராட்டம் !
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !!
போராட்ட வாழ்த்துக்களுடன்
U.சந்திரன M.கருப்புச்சாமி
(P4,செயலாளர் ) (P3செயலாளர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக