ஜெயகாந்தன் என்றோர் எழுத்தின் இமயம் சரிந்தது
ஜே கே என்ற ஜெயகாந்தன் ஓர் எழுத்தின் இமயம் , விளிம்பு நிலை மனிதர்களை தன கதைகளின் நாயகர் நாயகிகளாக்கியவர்
,. ஞான பீட விருது பெற்றவர் . சாஹித்திய அகடமி விருது உட்பட பல விருதுகள் அவரிடம்
வந்து சேர்ந்தன .
சிறு வயதில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து கம்யூன் வாழ்க்கையை
வாழ்ந்தவர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழ் ஜனசக்தி அச்சகம் அவரை தாலாட்டி
வளர்த்தது .மகாரிஷிகள் என காரல் மார்க்சையும் எங்கல்சையும் சொல்வார் . அது
வினோதமான வாக்கியமாகப் படலாம் ,அதற்கு அவரே விளக்கமும் சொல்வார் .யாரொருவர் மனித
குலத்தின் ஒட்டுமொத்த நலனுக்காக சிந்திக்கிறார்களோ அவர்களே மகா ரிஷிகள் என்பார், ஒருவகையில் அதுவும்
சரிதான் .
பாரதியில் தோய்ந்தவர் . திமிர்ந்த ஞான செருக்கு மிகுந்தவர் . அவரது
ஆளுமை வியப்பளிக்கும்.அவரை ஆதர்சன சக்தியாகக் கொண்டு உருவான எழுத்தாளர்கள் ஏராளம் .அவருக்கு
ஏகலைவனைப் போன்று ஏராளமான மாணாக்கர்கள் உண்டு .சொல்லொன்றும் செயலொன்றுமாய்
வாழ்ந்து கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் மத்தியில் தன எழுத்தைப் போலவே உண்மையாய்
வாழ்ந்தார் பேசினார் .
அவரின் மறைவு உடலுக்குத்தான் . தனது எழுத்தால் தமிழ் உள்ளவரை வாழ்ந்து
கொண்டே இருப்பார் .
ஜே.கே மறைவிற்கு நமது சிவகங்கைக் கோட்ட NFPE செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக