வேலைநிறுத்த
விளக்க பகுதி-கூட்டம் மற்றும் தோழியர். விஜயா அவர்களின் பணி நிறைவு பாராட்டல் :
மூத்த தோழியர். Gவிஜயா அவர்களின் பணி ஓய்வு பாராட்டல் நிகழ்வோடு, வேலைநிறுத்த
விளக்க பகுதிக்கூட்டமும் நடைபெறும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
கலந்துகொள்ளக்கூடிய
பகுதிகள்:
திருப்பத்தூர் LS G, அலுவலகம், துணை அலுவலகங்கள் மற்றும் அதனைச்சார்ந்த Bos,
கண்டரமாணிக்கம் So மற்றும் Bos
கண்டவராயன்பட்டி So மற்றும் Bo's
திருக்கோஷ்டியூர்
So மற்றும் Bos
ஏரியூர் So மற்றும் Bos
எனவே மேற்கண்ட
பகுதிகளைச் சேர்ந்த அனைத்து GDS தோழமைகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
இடம்:
திருப்பத்தூர் LS G அலுவலகம்.
நாள் : 14.03.2023
நேரம் : மாலை 4.00 மணி
அப்பகுதி
பொறுப்பாளர்கள் மற்றும் SPM தோழமைகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க
கேட்டுக்கொள்கிறேன்.🙏
வாழ்த்துக்களுடன்,....
கோட்டச் செயலர்கள்
தோழர்கள் கே.மதிவாணன் P3 , பி நடராசன்P4, எஸ்.செல்வன் GDS
சிவகங்கை DN
திருப்பத்தூர் Soவில் மூத்த Al GDSU தோழியர், விஜயா BPM S.S Kottai அவர்களின் பணி நிறைவு பாராட்டல் நிகழ்வோடு,
வேலைநிறுத்த விளக்க
பகுதிக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில்
மூத்த தோழர்.சேர்முகபாண்டியன், தோழர். மதிவாணன் P3 செயலர், தோழர்.நடராஜன் செயலர் P4, தோழர். கரிகாலச் சோழன் P3 தலைவர், தோழர்.இராமர், Ex தலைவர், தோழர்.வேல்முருகன் SPM, தோழர், வாசுதேவன்போஸ்ட்மாஸ்டர், தோழர் அமுல்ராஜ்,
தோழர்.மாதவன், தோழர்.முருகானந்தம் Spm மற்றும் ஏரியூர், கண்ரமாணிக்கம், காண்டவராயன்பட்டி, திருக்கோஷ்ட்டியூர், மற்றும் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர்
கலந்துகொண்டுபோராட்டத்தினை வாழ்த்தி பேசினார்கள்.
நன்றியுரை
தோழர்.இளங்கோ அவர்கள் பேசி முடித்து வைத்தார்கள்.
S. செல்வன்.கோட்டச் செயலர் AIGDSU
தோழியர்
விஜயாவின் பணி நிறைவு விழா குறித்து தோழர் சாத்தணி நாகராஜனின் பதிவு
இதுதான் சிவகங்கை
கோட்டத்தின் பெருமை..
இதுதான் நமது
பாரம்பரியம்...
இதுதான் நமது
கலாச்சாரம்...
இதுதான்
நமது உணர்வுடன் கூடிய ஒற்றுமை...
ஒரு GDS தோழனின் நிகழ்ச்சி என்றால் அங்கே அடிமட்ட
தோழனிருந்து மேல் மட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் வரை அனைவரும் சங்கமித்து வாழ்த்துவதுதான் நமது
தொழிற்சங்கம்,
இதுதான் நமக்கு
நம் தொழிற்சங்கம் கற்றுக் கொடுத்த
வழிகாட்டுதல்,
அதனால்தான்
அஞ்சலக தோழனுக்கு பணிநிறைவு பெற்றாலும் அங்கே ஓடிவந்து வாழ்த்துகிறார்கள்,
அங்கே ஜாதி இல்லை,
மதம் இல்லை,
அங்கே நான் Post
Master, நான் PA, நான் Post man என்ற கேடர் பாகுபாடு இல்லை அதனால் சமத்துவமும்
சகோதரத்துவமும் கூடி ஒற்றுமை என்ற ஒரு சொல் வடிவம் பிறக்கின்றது.
அதனால்தான் அங்கே நமது கோட்டத்தின்
தொழிற்சங்க பிதா மகன் தோழர் P. சேர்முக
பாண்டியனார்,அதோடு மட்டுமல்ல
அஞ்சல் மூன்றின் செயலாளர் தோழர் K. மதிவாணன்,அஞ்சல் நான்கின்
செயலாளர் தோழர் P. நடராஜன் மற்றும் AIGDSU செயலாளர் தோழர் S. செல்வன் மற்றும் அஞ்சல் மூன்றின் தலைவர் தோழர்
கரிகாலன்,அஞ்சல் மூன்றின்
தோழர்கள் முருகானந்தம், தோழர் ராமர்,
தோழர் வாசுதேவன் மற்றும்
தோழர்கள் தோழியர்கள் அனைவரும் கலந்து கொண்டு மூத்த தோழியர் விஜயா அவர்களை
வாழ்த்தியதுதான் நமது கோட்டத்தின் நற்சான்று என்பதை நாம் அனைவரும் பெருமை
கொள்ளவேண்டும்..
ஒரு GDS பணிநிறைவு விழாவினை சிறப்பித்து தந்த அனைத்து
தோழமைகளுக்கும் சிவகங்கை கோட்ட AIGDSU தொழிற்சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் நன்றி கூறி வாழ்த்துகிறோம்..
நன்றி நன்றி 🙏🙏..
விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில
|
சிவகங்கை தலைமை அஞ்சலகத்தில் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக