மார்ச் 28, 2022

வேலை நிறுத்த ஆர்பாட்டம் 28.03.2022

 சிவகங்கை Ho முன்பாக இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், பஸ் போக்குவரத்து மிக குறைவாக இருந்தாலும்கூட, அதையும் தாண்டி, பல தோழர்கள் & தோழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது, மகிழ்ச்சியாக இருந்தது.


மேலும், மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவன கூட்டமைப்பின், மாவட்ட ஓய்வுபெற்ற பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டு, பேருரை ஆற்றிய விதம் சிவகங்கையையே அதிர வைத்தது.


கூட்டத்தினில் துவக்கமாக, தோழர். G.நாகலிங்கம் கோட்ட உதவி செயலர்-P3 அவர்கள் எழிச்சி பொங்க , கோரிக்கைகளுடன் கூடிய கோஷம் எழுப்பிய விதம் மிக அருமையாக அமைந்தது.


கூட்டத்தை தலைமை ஏற்று வழிநடத்தியதோழர். K. மதிவாணன் செயலர் P3 அவர்களின் பங்கு மிக பிரமாதமாக அமைந்தது.


போராட்டத்தின் நோக்கத்தினை தெளிவாக, தோழர். P. நடராஜன் P4 செயலர்/S.செல்வன் செயலர் GDS ஆகியோர் விளக்கி பேசினர்.


போராட்டத்தில் கலந்துகொண்ட NFPE - P3/P4 மற்றும் Al GDSU தோழர்கள் & தோழியர்கள் அனைவருக்கும் கோட்ட தொழிற்சங்கங்களின் சார்பாக வீரம் செறிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


மானாமதுரை Ho/மானாமதுரை துணை அலுவலகம் மற்றும் மானாமதுரை சப்-டிவிசனைசார்ந்த துணை அலுவலகங்கள், கிளை அலுவலகங்கள் அனைத்துமே 100% மூடுவிழா கண்டுள்ளது என்பதனை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றோம்.


அதேபோல சிவகங்கை Ho மற்றும் துணை அலுவலகங்கள் முழுதும் அடைப்பு விழாகண்டதோடு, சிவகங்கை சப்-டிவிசனுக்கு உட்பட்ட அனைத்து துணை அலுவலகங்கள் மற்றும் கிளை அலுவலகங்கள் முழுதுமே 100% மூடுவிழாகண்டிருக்கின்றது என்பதும் பெருமைபட சொல்லவேண்டும்.


சிவகங்கை கோட்டத்திற்கு ,இப்போராட்டம் மீண்டும் ஒரு மைல்கல் எனலாம். பாரம்பரிய வழியினில் வழங்கம் போல 100% வெற்றி கண்டுள்ளது சிவகங்கை கோட்ட தொழிற்சங்கங்கள்.

பண்பாடும் , கலாச்சாரமும் மற்றும் பாரம்பரியமுமிக்க சிவகங்கை கோட்டத்தின் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் 100% ஒற்றுமையாக கடைபிடிக்கப்பட்டது.

2 தலைமை அஞ்சலகம்,

40 துணை அஞ்சலகம்,

155 கிளை அஞ்சலகம் என அனைத்து அலுவலகமும் மூடப்பட்டது..

முதல் நாள் போராட்டம் வெற்றிகராமாக முடிந்தது.


தமிழ் மாநில அளவில்  அதிகார வர்க்கத்திற்கு எதிராக சற்றும் சளைக்காத அளவில் ஒற்றுமையுடன் போராடும் குணம் உள்ள முதன்மையான கோட்டம் எதுவென்று கேட்டால் அது சிவகங்கை தான் என்ற பெருமையை பறைசாற்றும் கோட்டம் நமது கோட்டம்..,


நம் தொழிற்சங்க முன்னோடிகள் விதைத்து சென்ற ஒற்றுமையுடன் கூடிய வலிமை நமக்கு வழிகாட்டியாக போராட தூண்டுகிறது..💪


போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்கள் & தோழியர்களுக்கும் வீரவணக்கத்துடன் போராட்ட வாழ்த்துகள்













கருத்துகள் இல்லை: