Tuesday, 24 November 2015
61-வது சம்மேளன தினம்... (ஒன்பது சங்கங்கள் ஒன்றுபட்ட நாள் - 24.11.1954)
UPTW
என்ற பெயரில் இயங்கி வந்த சங்கத்தை தபால், தந்தி, தொலைத்தொடர்பு,
ஆர்.எம்.எஸ், நிர்வாக பகுதி என அனைத்தையும் ஒன்று சேர்த்து (P3 & P4,
T3 & T4, E3 & E4, R3 & R4, நிர்வாக தொழிற்சங்கம் என 9
சங்கங்களை ஒன்றிணைத்து) NFPTE சம்மேளனத்தை தோழர். ஓம் பிரகாஷ் குப்தா உருவாக்கினர்.
நவம்பர் 24, 1954 அன்று கூடிய பெடரல் கவுன்சிலில் பாபு ஜெகஜீவன்ராம் அவர்களால் NFPTE சம்மேளனம் துவங்கப்பட்டது. 25 ஆம் தேதியும் பெடரல் கவுன்சில் தொடர்ந்தது. கடுமையான விவாதம். தோழர்கள். தாதாகோஷ் - K. ராமமூர்த்தி-க்கு
இடையே போட்டி நிலவியது. 45 வாக்குகள் வித்தியாசத்தில் தோழர். தாதாகோஷ்
வெற்றி பெற்றார். S.A. டாங்கே அவர்கள் தலையீட்டில் S.V.G. டால்வி அவர்கள்
போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சக்திமிக்க
ஒற்றுமைச் சின்னமாக NFPTE பிறந்தது. அன்றைக்கு தோழர் குப்தா,ஞானையா போன்றோர்கள் AITEEU CLASS
III மற்றும் AIRMSEU CLASS III சங்கத்துக்கு அகில இந்திய பொதுச் செயலராக
இருந்தார்.
தொழிலாளர்
இயக்க வரலாற்றில் இது ஒற்றுமைச் சின்னமாகப் பார்க்கப்பட்டது. அப்போதைய
காங்கிரஸ் அரசாங்கம் இதை உடைத்திட முயலவில்லை என்பதோடு எந்த ஒரு புதிய
சங்கத்திற்கும் அங்கீகாரம் வழங்கிடாமல் இருந்தது.
9 சங்கங்களை ஒன்றிணைத்து உருவாக்கிய NFPTE சம்மேளனம் மத்திய தொழிற் சங்கங்களில் மிகப் பெரிய சக்தியாக விளங்கியது.
எத்தனை
போராட்டங்கள்... எத்தனை தடைகள்... பல பிரதமர்கள், பல துறை மந்திரிகள்,
எண்ணற்ற அதிகாரிகள் என பலரையும் சந்தித்து அடைந்த சாதனைகளை அளவிட
முடியாது.
தோழர் ...தோழியர்க்கு
சம்மேளன தின வாழ்த்துக்கள் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக